ஆட்சி அமைக்க உடைந்த கூட்டணியை ஒட்டவைக்கும் பாஜக, சிவசேனா?
மும்பை: மகாராஷ்டிராவில் ஆட்சி அமைக்க பாஜக சிவசேனாவுடன் கூட்டணி வைக்கலாம் என்று கூறப்படுகிறது.
மகாராஷ்டிரா சட்டசபை தேர்தல் கடந்த 15ம் தேதி நடைபெற்றது. தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகிறது. மொத்தம் உள்ள 288 தொகுதிகளில் பாஜக 91 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. சிவசேனா 47 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. பாஜக நிச்சயம் பல இடங்களை கைப்பற்றும் என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க பாஜக சிவசேனாவின் உதவியை நாடும் என்று கூறப்படுகிறது.

இந்த புதிய கூட்டணி குறித்து பாஜக, சிவசேனா தலைவர்கள் இன்று மாலை பேச்சுவார்த்தை நடத்தக்கூடும் என்று செய்திகள் வெளியாகியுள்ளன. முன்னதாக தொகுதி பங்கீட்டில் பிரச்சனை ஏற்பட்டதால் பாஜக-சிவசேனா கூட்டணி உடைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் பாஜகவின் முதல்வர் வேட்பாளரான தேவேந்திர பட்னாவிஸ் கூறுகையில்,
சிவசேனா எங்களின் எதிரி அல்ல. காங்கிரஸும், தேசியவாத காங்கிரஸும் தான் எங்கள் எதிரி என்றார்.
இதன் மூலம் அவர் பாஜக, சிவசேனாவுடன் மீண்டும் கைகோர்க்கலாம் என்பதை சூசகமாக தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications