இதென்னய்யா புது வசனமாக இருக்கே..ஆடு கோழி திருட்டு மாதிரி ‘அரசாங்கத்தை’ திருடுன பாஜக- ராகுல் அட்டாக்!
போபால்: மத்திய பிரதேசத்தில் மக்கள் தேர்ந்தெடுத்த காங்கிரஸ் அரசாங்கத்தை பாஜக திருடிவிட்டது என மூத்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கடுமையாக விமர்சித்தார்.
மத்திய பிரதேச சட்டசபை தேர்தல் வரும் 17-ந் தேதி நடைபெற உள்ளது. மொத்தம் 230 தொகுதிகளைக் கொண்ட மத்திய பிரதேசத்தில் பெரும்பான்மைக்கு தேவை 116 இடங்கள்.

மத்திய பிரதேசத்தில் ஆளும் பாஜக அரசு, காங்கிரஸிடம் ஆட்சியை பறிகொடுக்கக் கூடும் என்கின்றன பெரும்பாலான கருத்து கணிப்புகள். மத்திய பிரதேசத்தில் ஆளும் பாஜகவும் காங்கிரஸும் வாக்குறுதிகளை வாரி இறைத்துள்ளன. அதேபோல இரு கட்சிகளின் தலைவர்களும் தீவிர பிரசாரம் செய்து வருகின்றனர்.
ம.பி.யில் இன்று தேர்தல் பிரசாரப் பொதுக் கூட்டத்தில் மூத்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பேசியதாவது: மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சியின் புயல் வீச உள்ளது. மத்தியப் பிரதேச மக்கள் காங்கிரஸ் கட்சிக்கு சுமார் 150 இடங்களைக் கொடுக்கப் போகிறார்கள்.
நீங்கள் 5 ஆண்டுகளுக்கு முன்பு மத்தியப் பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சியைத் தேர்ந்தெடுத்தீர்கள். ஆனால் மோடி-சிவ்ராஜ் சிங்-அமித்ஷா எம்எல்ஏக்களை விலைக்கு வாங்கி உங்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தை திருடினார்கள்.
உங்கள் முடிவையும் உங்கள் இதயக் குரலையும் நசுக்க பாஜக தலைவர்கள் உழைத்துள்ளனர். பாஜக அரசு, மாநில விவசாயிகள், இளைஞர்கள் மற்றும் சிறு வியாபாரிகளை வஞ்சித்துள்ளது. காங்கிரஸால் இதைச் செய்ய முடியாது என்று பாஜக கூறியது, ஆனால் நாங்கள் கடந்த முறை விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்தோம்.
மோடி இரண்டு இந்தியாவை உருவாக்கி உள்ளார். மத்தியப் பிரதேசம் போன்ற ஏழை இந்தியாவில் 18,000 விவசாயிகள் தற்கொலை செய்து கொள்கிறார்கள். இரண்டாவது இந்தியாவிலுள்ள கோடீஸ்வரர்கள் வெளிநாடுகளில் சொத்து வாங்குகிறார்கள். இந்தியா ஒன்றாக இருக்க வேண்டும் என்று நான் நம்புகிறேன். நமது இந்தியாவில் அனைவரும் மதிக்கப்பட வேண்டும். விவசாயிகள், தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களைக் கவனித்துப் பாதுகாக்க வேண்டும். இவ்வாறு ராகுல் காந்தி பேசினார்.
-
பாமக வரலாற்றிலேயே முதல் முறையாக.. 35 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகக் குறைவான தொகுதிகளில் போட்டி! -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை? -
TN Election: 1-ல்தான் பாஜக ஜெயிக்குமா? திமுக 180-ஆ? டெல்லியை அதிர வைத்த ANS அதிர்ச்சி சர்வே! -
விலை பேசப்படும் காங்கிரஸ் சீட்டுகள்! ராகுல் காந்திக்கு பறந்த புகார்! -
விடிய விடிய நடந்த பேச்சுவார்த்தை.. புதுவையில் திமுக - காங்கிரஸ் தொகுதி பங்கீட்டில் இழுபறி நீடிப்பு -
வன்னியர் மட்டும் வாழக் கூடாதா? காங்கிரஸ் கட்சிக்குள் வெடித்த மோதல்! சீனியர் தலை போட்ட பரபர மீட்டிங்! -
உடையும் திமுக காங்கிரஸ் கூட்டணி? தொகுதிகளை முடிவு செய்வதில் நீடிக்கும் குழப்பம்! புதுச்சேரியில் பரபர -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
என்டிஏவில் எல்லா நாளும் கார்த்திகை.. ஒரே குடும்பமா இருக்கோம்! சென்னை வந்ததும் கோயல் சொன்ன வார்த்தை! -
கேரளா தலையெழுத்தை தீர்மானிக்கும் "அந்த" சில ஆயிரம் வாக்குகள்.. கரையேறுமா காங்கிரஸ்? -
அசைக்க முடியாத சாதனையைச் செய்த மோடி! 8,931 நாள் அரசு பதவி! உலக அளவில் உயரும் டிஜிட்டல் செல்வாக்கு! -
சாத்தூர் தொகுதியில் போட்டியா? எங்கும் போட்டியிடுவேன்.. நயினார் நாகேந்திரன் நேரடியாக சொன்ன பதில்!












Click it and Unblock the Notifications