கொடூரத்தின் உச்சம்! பழங்குடியின பெண்ணை.. கழிவறையை நக்க கட்டாயப்படுத்திய ஜார்க்கண்ட் பாஜக நிர்வாகி!
ராஞ்சி: பாஜக நிர்வாகி சீமா பத்ரா தனது வீட்டில் பணியாற்றிய பழங்குடியின பெண்ணை கொடூரமாக டார்ச்சர் செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த பாஜக நிர்வாகியாக இருந்தவர் சீமா பத்ரா. இவர் கடந்த காலத்தில் பாஜகவின் மகளிர் பிரிவின் தேசிய செயற்குழு உறுப்பினராகவும் இருந்தார்.
இந்நிலையில், அவர் தனது வீட்டில் பணியாற்றிய பழங்குடியின பெண்ணை கொடூரமாக டார்ச்சர் செய்ததாகப் புகார் எழுந்தது. அந்த பழங்குடியின பெண் வீடியோவில் தான் சந்தித்த கொடூரங்களைப் பகிர்ந்துள்ளார்.

பரபர வீடியோ
அந்த வீடியோவில் பாதிக்கப்பட்ட பழங்குடியின பெண் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவது போல தெரிகிறது. அதில் அந்த பெண்ணின் பல பற்களைக் காணவில்லை. அந்த பெண்ணால் சரியாக உட்காரக் கூட முடியவில்லை. அந்த பெண் மீண்டும் மீண்டும் கொடூரமாக தாக்கப்பட்டதையே அவரது உடலில் ஏற்பட்ட காயங்கள் காட்டுகிறது. இந்த வீடியோ பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. சீமா பத்ராவை உடனடியாகக் கைது செய்ய வேண்டும் என்று பலரும் வலியுறுத்தி வருகின்றனர்.

சீமா பாத்ரா
29 வயதான பாதிக்கப்பட்ட அந்த பெண் ஜார்கண்டில் உள்ள கும்லா பகுதியைச் சேர்ந்தவர். சுமார் 10 ஆண்டுகளாகவே அவர் சீமா பாத்ராவிடம் வேலை செய்து வருகிறார். சில காலம் டெல்லியிலும் பின்னர் ராஞ்சியிலும் உள்ள பாத்ராவின் வீடுகளில் அந்த பழங்குடியின பெண் வேலை செய்துள்ளார். கடந்த 4 ஆண்டுகளாகவே அந்த பெண் ராஞ்சியில் தான் வேலை செய்து வருகிறார்.

சித்திரவதை
கடந்த 6 ஆண்டுகளாகவே சீமா பாத்ரா அந்த பழங்குடியின பெண்ணை கொடூரமான சித்திரவதை செய்துள்ளார். அந்த வீடியோவில் மிகுந்த வேதனையுடன் பேசிய அந்த பெண், சூடான தவா மற்றும் கம்பியால் எல்லாம் தன்னை தாக்கியதாகத் தெரிவித்தார். மேலும், சீமா பாத்ரா தனது பற்களையும் அடித்து நொறுக்கியதாகவும் அவர் தெரிவித்தார். அதிலும் ஒரு கட்டத்தில் கழிப்பறையில் இருந்த சிறுநீரைக் கூட நக்க வைத்தாகத் தெரிவித்துள்ளார்.

மகன்
இந்த சித்திரவதை எல்லாம் தனக்கு ஒரு தண்டனையாக வழங்கப்பட்டதாகவும் இருப்பினும் கடைசி வரை தவறு என்னவென்று தெரியாது என்றும் அந்த பெண் தெரிவித்தார். சீமா பாத்ராவின் மகன் ஆயுஷ்மான் தான் அந்த பெண்ணுக்கு உதவி உள்ளார். ஆயுஷ்மான் மட்டும் இல்லையென்றால் தான் என்றோ உயிரிழந்து இருப்பேன் என்றும் அந்த பழங்குடியின பெண் தெரிவித்தார்.

சஸ்பெண்ட்
இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து சீமா பத்ராவை ஜார்கண்ட் பாஜக இடைநீக்கம் செய்து ஜார்கண்ட் பாஜக தலைவர் தீபக் பிரகாஷ் உத்தரவிட்டார். மேலும், பழங்குடியினப் பெண்ணை கொடுமைப்படுத்தியது தொடர்பாக சீமா பத்ரா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது சஸ்பெண்ட் செய்யப்பட்ட சீமா பத்ராவின் கணவர் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி மகேஷ்வர் பத்ரா ஆவர்.
-
ப்ளீஸ் 2 தொகுதிகளை மாத்திக்கலாம்.. அதிமுகவிடம் கேட்க பாஜக திட்டம்.. வெளியான பரபரப்பு தகவல் -
தமிழகத்தில் யார் சிறந்த அமைச்சர்கள்? வானதி சீனிவாசன் சொன்ன அந்த இருவர்! பாஜகவை கிண்டல் செய்தாங்களே! -
கோவை வடக்கில் அண்ணாமலை.. வானதி சீனிவாசனுக்கு பதில் களம் இறங்க போகிறாரா? -
வேட்பாளர் அறிவிப்பு இருக்கட்டும்.. இப்படி ஏன் செஞ்சீங்க? எடப்பாடி பழனிசாமி மீது கொந்தளித்த ரரக்கள்! -
அதிமுக கூட்டணியில் தாமரையின் '32'.. 2021 புள்ளி விவரம் என்ன.. பாஜகவினர் அறிய வேண்டியவை -
"தமிழகத்தில் பாஜக வளரவில்லை".. அதிமுக தான் எங்கள் பலம்.. மேடையிலேயே தோல்வியை ஒப்புக்கொண்ட அமித்ஷா! -
Election Exclusive: சிரிச்சுக்கிட்டே சமாளித்த எடப்பாடி..டஃப் தொகுதிகளை தள்ளி விட்டுட்டாரே! கொங்கில் போட்ட மெகா ஸ்கெட்ச்! -
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு












Click it and Unblock the Notifications