கோவா, உத்தரகாண்ட்டில் ஆபரேஷன் தாமரை? மீண்டும் காங். எம்.எல்.ஏக்களை தூக்கி ஆட்சி அமைக்குமோ பாஜக?
பனாஜி/ டேராடூன்: கோவா மற்றும் உத்தரகாண்ட் மாநிலங்களின் சட்டசபை தேர்தலில் தொங்கு சட்டசபைக்கான வாய்ப்புகள் உள்ளதாக தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு முடிவுகள் (எக்ஸிட் போல் முடிவுகள்) தெரிவிக்கின்றன. இதனால் சிறு கட்சிகளுடன் கூட்டணி அமைக்க காங்கிரஸ் முயற்சிக்கிறது. இன்னொரு பக்கம், காங்கிரஸ் எம்.எல்.ஏக்களை வளைத்துப் போட்டு வழக்கமான பாணியில் பாஜக ஆட்சி அமைக்க வாய்ப்புகள் அதிகம் என்கின்றன தகவல்கள்.
40 இடங்களை கொண்ட கோவா மற்றும் 70 இடங்களை கொண்ட உத்தரகாண்ட் சட்டசபை தேர்தல் முடிவுகள் எப்படி இருக்கும் என்கின்றன தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் நேற்று வெளியாகின. உத்தரப்பிரதேச மாநிலத்தில் 7வது மற்றும் இறுதி கட்ட வாக்குப் பதிவு முடிவடைந்த நிலையில் இந்த எக்ஸிட் போல் முடிவுகள் வெளியிடப்பட்டன.

எக்ஸிட் போல் முடிவுகள்
உத்தரப்பிரதேச மாநிலத்தில் பாஜக; பஞ்சாப் மாநிலத்தில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சி அமைக்கும் என திட்டவட்டமாக கூறியுள்ளன எக்ஸிட் போல் முடிவுகள். அதே நேரத்தில் கோவாவில் காங்கிரஸ், பாஜக இரண்டுமே தலா 16 இடங்கள் வரை பெறக் கூடும்; மணிப்பூர் மற்றும் உத்தரகாண்ட் மாநிலத்தில் பெரும்பான்மைக்கு குறைவான இடங்களுடன் பாஜக தனிப்பெரும் கட்சியாக உருவெடுக்கும் என்பதும் எக்ஸிட் போல் முடிவுகள்.

கோவா காங். உஷார்
கோவாவைப் பொறுத்தவரையில் ஆட்சி அமைக்க 21 இடங்கள் தேவை. இதனால் திரிணாமுல் காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சிகளுடன் இப்போதே தேர்தலுக்குப் பிந்தைய கூட்டணி குறித்த பேச்சுவார்த்தைகளை காங்கிரஸ் மேற்கொண்டுள்ளது. மேலும் கடந்த 2017-ம் ஆண்டு காங்கிரஸ் எம்.எல்.ஏக்களை பாஜக வளைத்துப் போட்டு கோவா சட்டசபையில் பெரும்பான்மையை காட்டியது பாஜக. அதே போன்ற ஒருநிலைமை இப்போது வந்துவிடக் கூடாது என்பதற்காக தேர்தலுக்கு முன்னரே கோவா காங்கிரஸ் வேட்பாளர்கள், கட்சி தாவ மாட்டோம் என சத்தியம் செய்து கொடுத்தனர். அடுத்த கட்சி எம்.எல்.ஏக்களை வளைக்கும் ஆபரேஷன் தாமரை குறித்து கோவா காங்கிரஸ் இப்போதே உஷாராகி இருக்கிறது.

ஆபரேஷன் தாமரை?
70 இடங்களைக் கொண்ட உத்தரகாண்ட் மாநிலத்தில் பெரும்பான்மைக்கு தேவை 36 இடங்கள். பாஜக கூட்டணி 35 இடங்களில் வெல்லும் என்பது எக்ஸிட் போல் முடிவுகளின் கணிப்பு. இதனால் பாஜக எளிதாக ஆட்சி அமைக்க முடியாத சூழ்நிலை உருவாகி உள்ளது. இம்மாநிலத்தில் பாஜகவுக்கு காங்கிரஸ் கட்சி கடும் போட்டியுடன் விஸ்வரூபம் எடுக்கும் எனவும் அக்கருத்து கணிப்புகள் தெரிவித்துள்ளன. இதனால் காங்கிரஸ் கட்சியின் ஒரு சில எம்.எல்.ஏக்களை இழுத்துப் போட்டு ஆட்சியை அமைத்துவிடலாம் என ஸ்கெட்ச் போட்டு வருகிறது பாஜக. இதனை உணர்ந்து கொண்ட உத்தரகாண்ட் காங்கிரஸ் தமது எம்.எல்.ஏக்களை எப்படி பாதுகாப்பது என்பதற்கான வியூகத்தை இப்போதே விவாதித்து வருகிறதாம்.

பாஜகவின் பார்முலா
பொதுவாக எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் ஆபரேஷன் தாமரை என்ற பெயரில் கொத்தாக ஆளும் கட்சி எம்.எல்.ஏக்களை ராஜினாமா செய்ய வைப்பது; கொத்தாக எம்.எல்.ஏக்களை கட்சி தாவ வைப்பது... இதன் மூலம் ஆட்சியைக் கவிழ்த்து புதிய அரசை அமைப்பது என்பதை ஒரு அரசியல் கோட்பாடாகவே பாஜக கடைபிடித்து வருகிறது. தற்போதைய 5 மாநில சட்டசபை தேர்தலுக்குப் பின்னர் ஆபரேஷன் தாமரையை முழு வீச்சில் பாஜக அமல்படுத்தவே வாய்ப்புகள் அதிகம் எனவும் கூறப்படுகிறது.
-
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி உற்சாகம்.. LIC பாலிசிதாரர்களுக்கு காத்திருக்கும் அந்த ஒரு ரகசியம் -
வைத்திலிங்கம் வயிற்றில் பாலை வார்த்த ஸ்டாலின்! திமுகவுக்கு ஜம்ப்பான 5 பேருக்கு சீட்! யார் அவர்கள்? -
போடியில் ஓபிஎஸ்! ஆலங்குளத்தில் மனோஜ் பாண்டியன்! திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு -
164.. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.. திமுக பட்டியலில் கடைசி பெயராக வந்த முதல்வர் பெயர் -
சட்டமன்ற தேர்தலில் நடிகர் சுந்தர் சி போட்டி.. மதுரை மத்திய தொகுதியில் களம் இறங்குகிறார்.. ஏசி சண்முகம் அறிவிப்பு -
தமிழ் புத்தாண்டு பலன்: எச்சரிக்கையாக இருக்க வேண்டிய 3 ராசிகள்.. உங்க ராசி இருக்கா பாருங்க -
எழும்பூர் டூ பத்மநாபபுரம் வரை.. திமுகவில் சீட் மறுக்கப்பட்ட சிட்டிங் எம்எல்ஏக்கள்! முழு விவரம் -
அண்ணாமலையை தொட்ட விஜய்! கொங்குவில் ரகசிய வார் ரூம் டீல்? எடப்பாடி பழனிசாமிக்கு காத்திருக்கும் ஷாக் -
DMK: 3 அமைச்சர்களுக்கு சீட் இல்லை.. ஸ்டாலின் அறிவித்த திமுக வேட்பாளர் பட்டியலில் ஷாக்!












Click it and Unblock the Notifications