ராஜஸ்தானில் காங். தோல்வியை தழுவும்-ஆட்சியை பிடிக்கும் பாஜக: இந்தியா டுடே 'எக்ஸிட் போல்'
டெல்லி: ராஜஸ்தான் மாநில சட்டசபை தேர்தலில் ஆளும் காங்கிரஸ் கட்சி படுதோல்வியை சந்திக்கும் என்றும் பாரதிய ஜனதா ஆட்சி அமைக்கிறது என்றும் இந்தியா டுடே நடத்திய தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ராஜஸ்தான் மாநிலத்தின் 200 தொகுதிகளுக்கான தேர்தல் அண்மையில் முடிவடைந்தது. இதைத் தொடர்ந்து வாக்காளர்களிடம் இந்தியா டுடே-ஓ.ஆர்.ஜி. இணைந்து கருத்து கணிப்பை மேற்கொண்டது.

இக்கருத்து கணிப்பின் முடிவுகள் இன்று வெளியிடப்பட்டன. விவரம்:
காங்- 62 இடங்கள்
ராஜஸ்தானில் ஆளும் காங்கிரஸ் கட்சி 62 தொகுதிகளைத்தான் கைப்பற்றுமாம். அக்கட்சி வசம் இருந்த 34 தொகுதிகள் பறிபோகிறதாம். கடந்த 2008 தேர்தலில் காங்கிரஸ் கட்சி 96 இடங்களைக் கைப்பற்றிருந்தது. வாக்கு சதவீதத்தைப் பொறுத்தவரை இது 34%. இதனால் முதல்வர் அசோக் கெலாட்டின் ஆட்சி முடிவுக்கு வருகிறது.
பாஜகவுக்கு செம மெஜாரிட்டி
200 தொகுதிகளில் பாஜகவுக்கு 110 தொகுதிகள் கிடைக்குமாம். கடந்த தேர்தலைவிட அக்கட்சிக்கு இது கூடுதலாக 32 இடங்கள். 2008ஆம் ஆண்டு பாஜக 78 இடங்களைப் பெற்றிருந்தது.
வசுந்தரராஜே மீண்டும் முதல்வர்
பாஜக ஆட்சியை கைப்பற்றக் கூடும் என்பதால் வசுந்தரராஜே மீண்டும் அம்மாநில முதல்வராகிறார். மொத்தம் 40% வாக்குகள் பாஜகவுக்குத்தானாம்.
எஞ்சிய 28 இடங்கள்
ராஜஸ்தான் சட்டசபை தேர்தலில் இந்த இரு கட்சிகளைத் தவிர்த்த எஞ்சிய கட்சிகள் 28 இடங்களைக் கைப்பற்ற இருக்கிறதாம். இவற்றின் வாக்கு சதவீதம் 26%.












Click it and Unblock the Notifications