Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஒரே வார்த்தை.. கங்குலிக்கு அடுத்த 'நெஞ்சுவலி'யை ரெடி செய்த பாஜக! வங்கத்து 'புலி' சிக்குமா?

Subscribe to Oneindia Tamil

கொல்கத்தா: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், பிசிசிஐ தலைவருமான சவுரவ் கங்குலி அடிக்கும் சிக்ஸர் போல மேற்குவங்கத்தில் பாஜக சிக்ஸர் அடிக்கும் என்று மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தைப் போல... இல்லை, இல்லை.. தமிழகத்தை விட ஒரு படி மேலாக மேற்குவங்கத்தில் தேர்தல் வெப்பம் அனல் வீசுகிறது. மம்தா பானர்ஜியின் திரிணாமூல் காங்கிரஸ் மற்றும் பாஜக இடையே அங்கு கடும் போட்டி நிலவுகிறது.

எப்படியாவது மம்தாவை ஆட்சிக் கட்டிலில் இருந்து இறக்கிவிட வேண்டும் என்று பாஜகவும், எப்பாடுபட்டாவது பாஜகவை உள்ளே நுழைய விடமாட்டேன் என்று மம்தாவும் கங்கணம் கட்டிக் கொண்டு வாக்கு சேகரித்து வருகின்றனர்.

 எண்ணமே இல்லை

எண்ணமே இல்லை

இந்நிலையில், மேற்குவங்கத்தைச் சேர்ந்த கிரிக்கெட் வீரரும், பிசிசிஐ தலைவருமான சவுரவ் கங்குலியை மம்தாவுக்கு எதிராக களமிறக்க பாஜக வியூகம் வகுத்து வருகிறது. இதற்காக, பாஜக சார்பில் கங்குலியிடம் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. ஆனால், கங்குலி இதுவரை தான் அரசியலுக்கு வரும் எண்ணமே இல்லை என்று தொடர்ந்து இதுகுறித்த கேள்விகளுக்கு மறுத்து வருகிறார்.

 ரசிகர்கள் அதிர்ச்சி

ரசிகர்கள் அதிர்ச்சி

அதேசமயம், கங்குலியிடம் பாஜக பேசி வருவது உண்மை தான் என்றும், அவரை மேற்குவங்க அரசியலில் களமிறக்க பல்வேறு வகையில் அழுத்தம் கொடுத்து வருவதாக எதிர்க்கட்சிகளே கூறி வருகின்றன. தமிழகத்தில் ரஜினிகாந்தை களமிறக்க பாஜக முயன்றது போது, மேற்குவங்கத்தில் கங்குலியை களமிறக்கும் வியூகத்தில் பாஜக உறுதியாக உள்ளதாக கூறப்படுகிறது. இதற்கிடையே, ஹார்ட் அட்டாக் காரணமாக கங்குலி இருமுறை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அவரது நெஞ்சுவலி சம்பவத்திற்கு பிறகு பாஜக - கங்குலி குறித்த செய்திகள் குறையத் தொடங்கின.

 பாஜக ஆட்சி

பாஜக ஆட்சி

இந்நிலையில், மேற்குவங்கத்தில் தேர்தல் பரப்புரையில் பேசிய மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், மீண்டும் கங்குலியை மையப்படுத்தி பேசியிருக்கிறார். அவர் கூறுகையில், "கங்குலி கிரீஸை விட்டு வெளியே இறங்கி வந்தால், பந்து கண்டிப்பாக சிக்ஸருக்கு பறக்கும். அது போல உங்கள் ஆதரவுடன் கடந்த 2019 மக்களவை தேர்தலில், இங்கு பாஜக கிரீஸை விட்டு இறங்கி வெளியே வந்தது. இப்போது, சட்டமன்ற தேர்தலில் நிச்சயம் சிக்ஸர் அடித்து பாஜக ஆட்சியமைக்கும்" என்று தெரிவித்துள்ளார்

 நெஞ்சுவலி வருமோ?

நெஞ்சுவலி வருமோ?

இதன்மூலம், சிறிது நாட்களாக சைலன்ட் மோடில் இருந்து கங்குலி மேட்டரை மீண்டும் தூசித் தட்டியுள்ளார் ராஜ்நாத் சிங். இதையடுத்து கங்குலி விரைவில் பாஜகவில் இணையப் போகிறார் என்ற செய்தி மீண்டும் றெக்கை கட்டி பறக்கத் தொடங்கியுள்ளன. அதேசமயம், அமைச்சரின் பேச்சால் மீண்டும் கங்குலிக்கு நெஞ்சுவலி வந்துவிடப் போகிறது என்றும் நெட்டிசன்கள் சமூக தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+