அருணாச்சல பிரதேசம்: பாஜக வேட்பாளர்கள் 10 பேர் போட்டியின்றி எம்.எல்.ஏ.க்களாக தேர்வு!
இடாநகர்: அருணாச்சல பிரதேச சட்டசபைத் தேர்தலில் பாஜகவின் 10 வேட்பாளர்கள் போட்டியின்றி எம்.எல்.ஏக்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
அருணாச்சல பிரதேச மாநிலத்தில் மொத்தம் 2 லோக்சபா தொகுதிகள் உள்ளன. இத்தொகுதிகளுக்கு ஏப்ரல் 19-ந் தேதி வாக்குப் பதிவு நடைபெற உள்ளது.

அருணாச்சல பிரதேச மாநிலத்தின் 60 சட்டசபை தொகுதிகளுக்கும் ஏப்ரல் 19-ந் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்பு மனுத் தாக்கல் மார்ச் 20-ந் தேதி தொடங்கி மார்ச் 27-ந் தேதி வரை நடைபெற்றது. வேட்பு மனுக்களை திரும்பப் பெறும் கால அவகாசம் நேற்றுடன் நிறைவடைந்தது. இதனடிப்படையில் இறுதிக் கட்ட வேட்பாளர்கள் பட்டியலும் வெளியானது.
இதில் அருணாச்சல பிரதேச முதல்வர் பெமா காண்டு, துணை முதல்வர் சவ்னா மெய்ன் உட்பட 10 பாஜக வேட்பாளர்களை எதிர்த்து ஒருவர் கூட வேட்பு மனுத் தாக்கல் செய்யவில்லை. இதனால் 10 பேருமே போட்டியின்றி எம்.எல்.ஏ.க்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஜூன் 4-ந் தேதி வாக்கு எண்ணிக்கையின் போது வெளியிடப்படும்.












Click it and Unblock the Notifications