கேரளா கோயில் விழாவில் தகராறு.. பா.ஜ.க. தொண்டர் அடித்துக்கொலை
கேரளாவில் பா.ஜ.க. தொண்டர் அடித்துக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சூர்: கோயில் விழாவின் போது ஏற்பட்ட தகராறில் பா.ஜ.க. தொண்டர் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் திருச்சூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டத்தில் உள்ள கோக்குலங் கரா என்ற கோவிலில் நேற்று முன்தினம் இரவு பூரம் விழா கொண்டாடப்பட்டது.

இந்த விழாவில் கலந்துகொண்டிருந்த பா.ஜ.க. தொண்டர்களான நிர்மல் (வயது 20), மிதுன் ஆகியோருக்கும் ஒரு கும்பலுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றியதில் 7 பேர் கொண்ட அந்த கும்பல் பா.ஜ.க. தொண்டர்கள் இருவரையும் சரமாரியாக தாக்கியது.
இதில் அவர்கள் இருவரும் பலத்த காயம் அடைந்த இருவரும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இதில் நிர்மல் பரிதாபமாக இறந்தார். மிதுனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவத்தை கண்டித்து பா.ஜ.க.வின் சார்பில் நேற்று அந்த மாவட்டம் முழுவதும் முழு அடைப்பு போராட்டம் நடத்தப்பட்டது.












Click it and Unblock the Notifications