லோக்சபா தேர்தலில் 450 தொகுதிகளில் பாஜக போட்டி: ராஜ்நாத்சிங் தகவல்

சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய ராஜ்நாத்சிங், லோக்சபா தேர்தலில் 450 தொகுதிகளில் போட்டியிடுவோம். 272 தொகுதிகளுக்கு மேல் கைப்பற்றி மத்தியில் ஆட்சியை அமைப்போம்.
லோக்சபா தேர்தலுக்கான கூட்டணி பற்றி இப்போது தெரிவிக்க முடியாது. இலங்கை படையினரால் தொடர்ந்து பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகும் தமிழக மீனவர்களைக் காக்க மத்திய அரசு தவறிவிட்டது
பாரதிய ஜனதா கட்சி ஆட்சி அமைத்தால் இந்திய மீனவர்கள் பிரச்சனைகளுக்குத் தீர்வு காணப்படும். இலங்கையில் வடக்கு மாகாணத் தேர்தலில் வெற்றி பெற்ற தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு வாழ்த்துகளை தெரிவிக்கிறோம். இலங்கையில் தமிழர்களுக்கு மறுக்கப்பட்ட உரிமைகள் இனி கிடைக்கும் என்று நம்புகிறோம்.
காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு, அமெரிக்காவின் நிர்பந்தங்களுக்கு பணிந்து செல்கிறது. வேட்பாளர்களை வாக்காளர்கள் நிராகரிக்கலாம் என்ற உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை நாங்கள் வரவேற்கிறோம்.
சேலத்தில் ஆடிட்டர் ரமேஷ் கொலை வழக்கில் குற்றவாளிகளைக் கண்டுபிடித்து தண்டனை வழங்க தமிழக முதல்வர் நிச்சயம் நடவடிக்கை எடுப்பார்.
தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை நிராகரிப்பது குறித்து விவாதிக்க அனைத்துக் கட்சிக் கூட்டத்தை மத்திய அரசு கூட்ட வேண்டும் நாட்டின் பொருளாதாரம் தற்போது பலவீனமாக இருக்கிறது.
தண்டனை பெற்ற எம்பி, எம்எல்ஏக்களை பாதுகாக்க அவசர சட்டம் கொண்டு வருவது குறித்த ராகுல் காந்தியின் கருத்து வரவேற்கத்தக்கது என்றார்.












Click it and Unblock the Notifications