வெளிநாட்டில் கருப்பு பணத்தை பதுக்கியிருப்பவர்களுக்காக சலுகை திட்டத்தை அறிமுகப்படுத்தும் மத்திய அரசு

Subscribe to Oneindia Tamil

டெல்லி: வெளிநாட்டு வங்கிகளில் கருப்பு பணத்தை பதுக்கி வைத்திருப்பவர்கள் தாமாக முன்வந்து ஒப்புக் கொண்டால் குறைந்தபட்ச அபராதத்துடன் தப்பிக்கும் புதிய திட்டத்தை மத்திய அரசு விரைவில் அறிமுகப்படுத்த உள்ளது.

வெளிநாட்டு வங்கிகளில் இந்தியரகள் பதுக்கி வைத்துள்ள கருப்பு பணத்தை மீட்கும் பணியில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது. இந்நிலையில் கருப்பு பணத்தை பதுக்கி வைத்திருப்பவர்களுக்காக ஒரு சலுகை திட்டத்தை மத்திய அரசு விரைவில் அறிமுகப்படுத்த உள்ளது.

Black money: Compliance window to be short and out soon

அந்த திட்டம் இந்த மாத இறுதி அல்லது அடுத்த மாதம் அறிமுகப்படுத்தக்கூடும் என்றும், இரண்டு மாதங்கள் மட்டுமே செல்லுபடியாகும் என்றும் கூறப்படுகிறது. அந்த திட்டத்தின்படி தானாக முன்வந்து வெளிநாட்டு வங்கிகளில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள கருப்பு பணத்தை சம்பந்தப்பட்டவர்கள் வரித்துறை அதிகாரிகளிடம் ஒப்புக் கொண்டால் அவர்கள் 30 சதவீத வரி மற்றும் 30 சதவீத அபராதம் செலுத்திவிட்டு பிரச்சனையில் இருந்து வெளியே வரலாம்.

சலுகை திட்டத்தை பயன்படுத்தாமல் வரித் துறை அதிகாரிகள் கருப்பு பணத்தை பதுக்கி இருப்பவர்களை கண்டுபிடித்தால் அவர்கள் 30 சதவீத வரி, 90 சதவீத அபராதம் மற்றும் கிரிமினல் வழக்கு விசாரணையை சந்திக்க வேண்டும் என்று கூறப்படுகிறது.

இது குறித்து மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி லோக்சபாவில் கூறுகையில்,

கருப்பு பணத்தை பதுக்கியிருப்பவர்கள் தானாக முன்வந்து அதை ஒப்புக் கொண்டால் 30 சதவீத வரி மற்றும் 30 சதவீத அபராதத்துடன் தூய்மையானவர்களாக வெளியேறும் சலுகை திட்டம் அறிமுகப்படுத்தப்படுகிறது என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+