தானே ரசாயன ஆலையில் பாய்லர் வெடித்து விபத்து: 5 பேர் பலி, 70 பேர் காயம்
தானே: தானேவில் உள்ள ரசாயன ஆலையில் பாய்லர் வெடித்ததில் 5 பேர் பலியாகினர், சுமார் 70 பேர் காயம் அடைந்துள்ளனர்.

மகாராஷ்டிரா மாநிலம் தானே மாவட்டத்தில் உள்ள தோம்பிவாலியில் ஹெர்பரட் பிரவுன்-ஆச்சார்யா ரசாயன ஆலை உள்ளது. அந்த ஆலையில் இன்று காலை 11 மணிக்கு பாய்லர் வெடித்தது. இதையடுத்து ஆலையில் தீ விபத்து ஏற்பட்டது. இதில் ஆலையில் பணியாற்றிய 5 பேர் பலியாகினர். மேலும் 70 பேர் காயம் அடைந்துள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து உடனே தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவல் கிடைத்தவுடன் 8 தீயணைப்பு வண்டிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தன. இந்த விபத்தில் அப்பகுதியில் இருக்கும் 6 கட்டிடங்கள் சேதம் அடைந்துள்ளன.

காயம் அடைந்தவர்கள் எய்ம்ஸ், ஆர்.ஆர். மருத்துவமனை, சாஸ்திரிநகர் மருத்துவமனை மற்றும் சிவம் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ரசாயன ஆலை விபத்தால் தோம்பிவ்லியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

சம்பவ நடந்த இடத்தில் மகாராஷ்டிர முதல்வர் தேவந்திர பட்னாவிஸ் ஆய்வு மேற்கொண்டார். மேலும், இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த மாவட்ட கலெக்டர் டாக்டர் மகேந்திர கல்யாண்கர் உத்தரவிட்டுள்ளார்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications