ஓடும் ரயிலில் டாய்லெட்டில் தூக்குப் போட்டுத் தற்கொலை செய்த வாலிபர்!

Subscribe to Oneindia Tamil

லக்னோ: ஓடும் ரயிலில் டாய்லெட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் வாலிபர் ஒருவரின் உடல் மீட்கப்பட்ட சம்பவம் உத்திரப்பிரதேசத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஹரியானா தலைநகர் சண்டிகரில் இருந்து குஜராத் தலைநகரான அகமதாபாத் வரை செல்லும் உன்ச்சஹார் எக்ஸ்பிரஸ் ரயில் உத்தரப்பிரதேசத்தின் கான்பூர் நகரை நேற்றிரவு நெருங்கியது. அப்போது அதில் பயணித்த பெண் ஒருவர் கழிவறைக்கு சென்றுள்ளார்.

Body found hanging inside train's toilet in UP

கழிவறையின் கதவு உள்புறம் தாழிடப்படிருந்ததையடுத்து, வெகுநேரம் வெளியில் காத்திருந்த அந்தப் பெண், நீண்டநேரமாகியும் கதவு திறக்கப்படாததால் பொறுமை இழந்து கதவை தட்டியுள்ளார்.

ஆனால் உள்ளே இருந்து பதில் வராததால், அதிர்ச்சி அடைந்த அப்பெண் இது தொடர்பாக ரயில்வே போலீசாருக்கு தகவல் அளித்தார். விரைந்து வந்த போலீசார் கதவை உடைத்து திறந்துள்ளனர். அப்போது, உள்ளே ஒரு துண்டு துணியில் தூக்கு மாட்டியபடி இளைஞர் ஒருவர் பிணமாக தொங்கிக் கொண்டிருப்பதை கண்டு போலீசார் அதிர்ச்சி அடைந்தனர்.

சடலத்தை இறக்கி பரிசோதித்தபோது சட்டைப்பையில் இருந்த குறிப்புகளைப் பார்த்தபோது, இறந்தவரின் பெயர் ஷியாம் லால் (30) என்பதும் பீகார் மாநிலத்தின் சம்ப்ரான் மாவட்டத்தை சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது.

அந்த முகவரியின் அடிப்படையில் அவரது உறவினர்களுக்கு தகவல் தெரிவித்த ரெயில்வே போலீசார், உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+