டெல்லி: காத்மாண்டுவுக்கு கிளம்ப இருந்த 2 விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்
டெல்லி: டெல்லி விமான நிலையத்தில் இருந்து காத்மாண்டுவுக்கு கிளம்பவிருந்த 2 விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
டெல்லியில் உள்ள இந்திராகாந்தி விமான நிலையத்தில் இருந்து ஜெட் ஏர்வேஸ் விமானம் மற்றும் ஏர் இந்தியா விமானம் ஆகியவை காத்மாண்டுவுக்கு கிளம்பவிருந்தன. பயணிகள் விமானங்களில் ஏறி தங்களின் இருக்கைகளில் அமர்ந்துவிட்டனர்.

இந்நிலையில் விமான நிலையத்தில் உள்ள டிசிபி அலுவலகத்திற்கு ஒருவர் போன் செய்து காத்மாண்டுவுக்கு செல்லும் ஜெட் ஏர்வேஸ் மற்றும் ஏர் இந்தியா விமானங்களில் வெடிகுண்டு உள்ளது என்று கூறி இணைப்பை துண்டித்துவிட்டார்.
இதையடுத்து ஜெட் ஏர்வேஸ் விமானத்தில் இருந்த 122 பயணிகள் மற்றும் 7 சிப்பந்திகள் கீழே இறக்கிவிடப்பட்டு விமானம் தனியாக ஒரு இடத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது. இதே போன்று ஏர் இந்தியா விமானத்தில் இருந்த பயணிகளும் கீழே இறக்கிவிடப்பட்டு விமானம் தனியாக ஒரு இடத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது.
விமாங்களை வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை செய்து வருகின்றனர். முன்னதாக நேற்று டெல்லியில் இருந்து காத்மாண்டுவுக்கு கிளம்பவிருந்த ஜெட் ஏர்வேஸ் விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் அது தாமதாக கிளம்பியது.
இன்று போன் செய்தவர் இஸ்லாமாபாத்தைச் சேர்ந்த ஹபீஸ் ஆசாத் என்று தெரிய வந்துள்ளது. 2 விமானங்களிலும் லேப்டாப்புகளில் குண்டு இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications