மங்களூர் இன்போசிஸ் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்: ஊழியர்கள் வெளியேற்றம்

Subscribe to Oneindia Tamil

மங்களூர்: மங்களூரில் உள்ள இன்போசிஸ் அலுவலகத்திற்கு இன்று வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.

மங்களூர் கோட்டாராவில் உள்ள இன்போசிஸ் அலுவலகத்திற்கு இன்று ஒரு போன் அழைப்பு வந்தது. எடுத்து பேசியபோது மறுமுனையில் பேசிய நபர் அலுவலக வளாகத்தில் வெடிகுண்டு உள்ளதாகத் தெரிவித்துவிட்டு இணைப்பைத் துண்டித்துவிட்டார்.

இதையடுத்து அலுவலக கட்டிடத்தில் இருந்த ஊழியர்கள் அனைவரும் அவசர, அவசரமாக வெளியேற்றப்பட்டனர். இது குறித்து தகவல் அறிந்த போலீசார் மற்றும் 5 நபர்கள் கொண்ட வெடிகுண்டு நிபுணர்கள் குழு இன்போசிஸ் அலுவலகத்திற்கு விரைந்து வந்தது.

Bomb threat at Infosys office in Mangalore

வெடிகுண்டு நிபுணர்கள் அலுவலக வளாகத்தில் சோதனை நடத்தி வருகின்றனர். வெடிகுண்டு மிரட்டல் விடுத்து வந்த அழைப்பு கோடியபைலில் உள்ள ஒரு வீட்டில் இருந்து வந்ததாக இன்ஸ்பெக்டர் மஞ்சுநாத் தெரிவித்தார்.

மிரட்டல் விடுத்து வந்த அழைப்பின் எண் கோட்டிபிரசாத் ஆல்வா என்பவரின் பெயரில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+