For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மும்பை விமான நிலையங்கள், தாஜ் ஹோட்டலுக்கு வெடிகுண்டு மிரட்டல்

By Veera Kumar
Google Oneindia Tamil News

மும்பை: வெடிகுண்டு அச்சுறுத்தலை தொடர்ந்து மும்பை ஏர்போர்ட் மற்றும் தாஜ் ஹோட்டலுக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

மும்பை விமான நிலைய மேலாளருக்கு நேற்றிரவு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. அதில் பேசிய மர்ம நபர், மும்பை, உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விமான நிலையங்களில் வெடிகுண்டுகள் வெடிக்கும் என்றும், தாஜ் ஹோட்டலிலும் தாக்குதல் நடத்த வாய்ப்புள்ளதாகவும் கூறிவிட்டு இணைப்பை துண்டித்துள்ளார்.

Bomb threat to Mumbai's Taj hotel and airport

மேலும், அந்த மர்ம நபர் தன்னை விஜேஷ் குமார் என்று கூறிக்கொண்டதாகவும், சிலர், குண்டு வெடிப்பு பற்றி உரையாடியதை தான் கேட்டு போன் செய்ததாக சொன்னதாகவும், கூறப்படுகிறது.

இதையடுத்து ஏர்போர்ட்டுகள் மற்றும் தாஜ் ஹோட்டலுக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. ஏற்கனவே தாஜ் ஹோட்டல் கசாப் உள்ளிட்ட தீவிரவாதிகளின் தாக்குதலுக்கு இரையானது குறிப்பிடத்தக்கது.

English summary
A terror threat to the Taj Hotel and Airport at Mumbai has prompted security to be stepped up. A call threatening to blow up the Mumbai airport was made this morning following which security has been stepped up.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X