தேர்தல் கால தாக்குதல்களை தடுக்க எல்லை பாதுகாப்பு தீவிரம் – மத்திய அரசு உத்தரவு
டெல்லி: இந்தியாவின் மிக பதட்டமானவை எனக் கருதப்படும் எல்லையோர மாநிலங்களில் லோக்சபா தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு தொடர்ந்து நான்கு கட்டமாக நடைபெற இருக்கின்றது.
இதை ஒட்டி "பாதுகாப்பு ஏற்பாடுகளை உன்னிப்பாக கவனிக்க வேண்டும்" என ராணுவப் படையினருக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
பாகிஸ்தான், வங்கதேசம், நேபாளம் ஆகிய நாடுகளுக்கு அருகில் அமைந்துள்ள இந்தியாவின் எல்லையோர மாநிலங்களில் லோக்சபா தேர்தல் வரும் ஏப்ரல் 24 முதல் நான்கு கட்டங்களாக நடக்க உள்ளது.

உள்துறை அமைச்சகம் உத்தரவு:
பஞ்சாப் , உத்ரபிரதேசம், பீகார், ஜம்மு - காஷ்மீர், மேற்கு வங்கம், அசாம் ஆகிய மாநிலங்களில் மட்டும் 170 தொகுதிகள் உள்ளன. அப்படிப்பட்ட எல்லையோர பகுதிகளை உன்னிப்பாக கண்காணிக்கும்படி எல்லை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள துணை ராணுவ படைகளுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
தேர்தல் கால குற்றங்கள்:
நம் நாட்டில் தேர்தல் நடக்கும் சமயத்தில் போலி ரூபாய் நோட்டுகள் கடத்தல், போதை மருந்து ஆயுதங்கள் கடத்தல் போன்ற குற்றங்களில் அண்டை நாடுகளைச் சேர்ந்த சமூக விரோதிகள் ஈடுபடுவது வழக்கம்.
எல்லை பாதுகாப்பு தீவிரம்:
அத்தகைய நடவடிக்கைகளை உன்னிப்பாக கவனிக்கும் வகையில் ரோந்து பணியை தீவிரமாக்கும்படி எல்லை பாதுகாப்பு படையினர் இந்தியா - வங்கதேச எல்லை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள "சாஸ்ட்ரா சீமா பால்" படையினருக்கு உள்துறை அமைச்சகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
சமூக விரோதிகள் ஊடுருவல்:
இன்று துவங்கி மே 12 வரை நான்கு கட்டங்களாக தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் அனைவரது கவனமும் தேர்தலில் இருக்கும் போது இந்தியாவுக்குள் ஊடுருவி குற்றச் செயல்களை சமூக விரோதிகள் அரங்கேற்றலாம் என்பதால் பாதுகாப்பை தீவிரப்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
-
விமான நிலையத்தில் தப்பி தவறியும் "இந்த" இடங்களில் போட்டோ எடுக்காதீங்க.. உடனடி கைது தான்! ரூல்ஸ் என்ன -
ஏர்போர்ட்டில் வைத்தே கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர் கைது? டெல்லியில் அலறும் பாஜக அரசு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications