மோடி சார், ப்ளீஸ் இதை கொஞ்சம் கவனியுங்கள்: கடிதம் எழுதிய 8 வயது சிறுவன்
பெங்களூர்: பெங்களூரைச் சேர்ந்த 8 வயது மாணவன் பிரதமர் அலுவலகத்திற்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
வடக்கு பெங்களூரில் உள்ள வித்யாரன்யபுராவில் இருக்கும் தொட்டபொம்மசந்திராவில் குடும்பத்துடன் வசித்து வருபவர் அபினவ்(8). அவர் யஷ்வந்த்பூரில் இருக்கும் நேஷனல் பப்ளிக் ஸ்கூலில் 3வது வகுப்பு படித்து வருகிறார்.

அவரது வீட்டில் இருந்து பள்ளி 3 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. ஆனால் அவர் பள்ளிக்கு செல்ல 45 நிமிடங்கள் ஆகிறது. இந்நிலையில் இது குறித்து அபினவ் பிரமதர் அலுவலகத்திற்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
அந்த கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது,
கோரகுண்டேபாள்யா சந்திப்பு அருகே அவுட்டர் ரிங் ரோட்டில் ரயில்வே கிராசிங் பகுதியில் மேம்பாலம் கட்டும் பணி பல நாட்களாக நடந்து வருகிறது. இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் மக்களின் உடல் நலம் மட்டும் அல்ல எனது படிப்பும் பாதிக்கப்படுகிறது.
இழுத்துக் கொண்டே இருக்கும் மேம்பால பணியை விரைந்து முடிக்குமாறு ரயில்வே துறைக்கு உத்தரவிடுங்கள் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications