மும்பை மாநகராட்சித் தேர்தல் முடிவுகள்: சிவசேனா முன்னிலை- பாஜகவுக்கு பின்னடைவு!
மகாராஷ்டிர மாநிலம் மும்பை மாநகராட்சித் தேர்தலில் சிவசேனா கட்சி தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறது. கடும் பின்னடைவை சந்தித்துள்ள பாஜக அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளது.
மும்பை : மும்பை மாநகராட்சித் தேர்தலின் வாக்கு எண்ணிக்கையில் சிவசேனா கட்சி முன்னிலை வகித்து வருகிறது. பாஜக பலத்த பின்னடைவை சந்தித்து வருவதாக் அக்கட்சி தலைவர்கள் அதிர்ச்சியடைந்து போயுள்ளனர்.
கடந்த 2014-இல் மகாராஷ்டிராவில் நடைபெற்ற சட்டசபைத் தேர்தலில் பாஜக- சிவசேனா கூட்டணி ஆட்சியைக் கைப்பற்றியது. அதேநேரத்தில் மத்தியில் ஆளும் பாஜக அரசுக்கு எதிராக அவ்வப்போது சிவசேனா கருத்து தெரிவித்து வருகிறது.

இதனால் கோவா உள்ளிட்ட மாநில சட்டசபைத் தேர்தலில் சிவசேனா, பாஜகவுடன் கூட்டணி அமைக்கவில்லை. இந்நிலையில் பிருஹன் மும்பை மாநகராட்சித் தேர்தல் கடந்த திங்கள்கிழமை நடந்து முடிந்தது.
மொத்தமுள்ள 227 வார்டுகளுக்கு 2,200-க்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இந்த தேர்தலிலும் இருகட்சிகளும் தனித்து போட்டியிட்டன. 20 ஆண்டுகளுக்கு பின்னர் இரு கட்சிகளும் தனித்து களம் கண்டன,
இன்று காலை முதல் வாக்குகள் எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. இதுவரை 75 வார்டுகளில் சிவசேனா கட்சி தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறது. பாஜக 39 வார்டுகளில் மட்டுமே முன்னிலை பெற்றுள்ளது. இது பாஜகவுக்கு கடுமையான பின்னடைவாகும்.
இந்தத் தேர்தல் பாஜக, சிவசேனா ஆகியவற்றுக்கிடையே பலப்பரீட்டையாகவே இருந்தது. உத்தரப்பிரதேசம், உத்தரகண்ட், பஞ்சாப், கோவா உள்ளிட்ட சட்டசபை தேர்தல்கள் நடைபெற்று கொண்டிருக்கும்போது மும்பை உள்ளாட்சி தேர்தல் முடிவானது பாஜகவுக்கு பெரும் அதிர்ச்சியை அளித்துள்ளதாகவே அரசியல் பார்வையாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
-
பாடகி சுஜாதா மோகனுக்கு இருக்கும் பிரச்சனை.. யாராவது உதவுங்க! ஏ.ஆர் ரகுமான் சகோதரி உருக்கமான வேண்டுகோள் -
இந்தோனேஷிய கடலில் அது பாட்டுக்கு போகுது.. உலகமே வியப்பில் உறைந்திருச்சு! விலகிய 40 கோடி வருஷ மர்மம் -
திமுக கூட்டணியில் அடுத்த விக்கெட்.. விலகிய கையோடு அதிமுக கூட்டணியில் ஐக்கியம்.. யாருனு பாருங்க -
விலகினார் திருமாவளவன்.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை என அறிவிப்பு.. பின்வாங்கியது ஏன்? விளக்கம் -
தங்கத்தை அடகு வைத்து.. அந்த பணத்தில் புதிதாக தங்கம் வாங்கலாமா? மிக ஈஸியாக விளக்கிய ஆனந்த் சீனிவாசன் -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் உச்சவரம்பு நீக்கம்.. ரிசர்வ் வங்கி மக்களுக்கு ஜாக்பாட்.. சாதக, பாதகம் என்ன -
குஷ்புவிடம் 3.5 கிலோ தங்கம், 24.3 கிலோ வெள்ளி இருக்கு.. சுந்தர்.சி சொத்து மதிப்பு எவ்வளவு? -
ஈரான் போரை வைத்து பணம் பார்க்கும் டிரம்ப் வாரிசுகள்.. நடுவில் சிக்கிக்கொண்ட அரபு நாடுகள்! -
Thaai Kizhavi OTT: சொன்ன தேதிக்கு முன்பு ஓடிடியில் வந்த தாய் கிழவி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பு! ட்விஸ்ட் -
"FCRA சட்டத்திருத்தம் குரூரமானது.. கிறிஸ்தவ கல்வி நிறுவனங்களை முடக்க முயற்சி" - திமுக எம்.பி வில்சன் -
திருப்பூரில் அடியோடு மாறப்போகும் பின்னலாடை நிறுவனங்கள்.. ஏற்றுமதியாளர்கள் எடுத்த அதிரடி முடிவு -
சிங்காநல்லூர் காங்கிரஸ் வேட்பாளர் ஶ்ரீநிதி அண்ணாமலை ஆதரவாளராமே.. போராட்டத்தில் குதித்த கதர்கள்












Click it and Unblock the Notifications