Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மனநலம் குன்றிய 17வயது பெண்ணை 2 வருடங்களாக பலாத்காரம் செய்த சகோதரர்கள்! பெங்களூரில் அதிர்ச்சி சம்பவம்

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: மனநலம் பாதித்த இளம்பெண்ணை 2 ஆண்டுகளாக, அண்ணன்-தம்பி சேர்ந்து பாலியல் பலாத்காரம் செய்த கொடூர சம்பவம் பெங்களூரில் நடந்துள்ளது. பெங்களூர் கே.ஜி.ஹள்ளி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட, நாகவரா பகுதியை சேர்ந்த 17 வயது இளம் பெண் மும்தாஜ் (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் மன நலம் குன்றியவர்.

இதே வீட்டில் மும்தாஜின் தந்தையின் சகோதரர் குடும்பமும் கூட்டு குடும்பமாக வசித்து வருகிறது. மும்தாஜின் தந்தையின் சகோதரர் மகன்கள் முதாசீர் (20) மற்றும் முபாசீர் (14). அதாவது, மும்தாஜுக்கு சகோதரர் முறை உள்ளவர்கள். ஆனால் மும்தாஜ் மீது காம எண்ணம் கொண்ட சகோதரர்கள் இருவரும், 2 ஆண்டுகளாக வீட்டில் யாருமில்லாத நேரத்தில் பிரியாவுடன் பாலியல் உறவு வைத்துக்கொண்டு வந்துள்ளனர்.

மனநலம் குன்றியவர் என்பதால் இதுகுறித்து, மும்தாஜ் யாரிடமும் எதுவும் தெரிவிக்கவில்லை. உடல் நலக்குறைவுக்காக மும்தாஜை மருத்துவமனையில் பரிசோதித்தபோது பலாத்காரத்துக்கு அவர் ஆளாகியிருப்பது தெரியவந்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த குடும்பத்தார் மும்தாஜிடம் மெல்ல பேச்சுக் கொடுத்து கேட்டபோது நடந்த சம்பவத்துக்கு தனது சகோதரர்கள்தான் காரணம் என்று கூறியுள்ளார்.

இதையடுத்து, தாத்தா கவுஸ்கான், கே.ஜி.ஹள்ளி காவல் நிலையத்தில், தனது பேரன்களுக்கு எதிராக புகார் அளித்தார். பலாத்காரம் வழக்குடன், சிறுமிகளுக்கு எதிரான பாலியல் குற்றத்தடுப்பு சட்டத்தின் (POSCO) கீழும் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். தலைமறைவாகியுள்ள குற்றவாளிகளை போலீசார் தேடி வருகிறார்கள்.

மனநலம் குன்றிய பெண்ணை 2 ஆண்டுகளாக வீட்டுக்குள்ளேயே சகோதரர்கள் பலாத்காரம் செய்த சம்பவம் பெங்களூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+