மதக் கலவரம் பாதித்த முசாபநகர் நகரில் லைசென்ஸ் இல்லாமல் துப்பாக்கி வைத்திருந்த பிஎஸ்எப் வீரர் கைது
Subscribe to Oneindia Tamil
முசாபர்நகர், உ.பி: மதக் கலவரத்தால் கடுமையான பாதிப்புகளைச் சந்தித்த உ.பி. மாநிலம் முசாபர்நகரில் உரிமம் இல்லாமல் பிஸ்டல் வைத்திருந்ததாக எல்லைப் பாதுகாப்புப் படை வீரரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
அவரது பெயர் சதீஷ் குமார். இவர் பீகாரில் பணியில் இருந்து வந்தார். இந்த நிலையில் விடுமுறையில் உ.பி மாநிலம் முசாபர் நகர், கசம்பூர் கிராமத்திற்கு தனது வீட்டுக்கு வந்திருந்தார். அவரிடம் உரிமம் இல்லாத துப்பாக்கி இருப்பதாக போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது.
இதையடுத்து நேற்று இரவு போலீஸார் அவரது வீட்டில் சோதனை நடத்தி துப்பாக்கியைப் பறிமுதல் செய்து சதீஷ் குமாரையும் கைது செய்தனர்.












Click it and Unblock the Notifications