பிரதமரை மரியாதையாக குறிப்பிடாத ராணுவ வீரரின் 7 நாள் சம்பளம் கட்!
பிரதமரை "மாண்புமிகு", "ஸ்ரீ" என்று குறிப்பிடாததால் ராணுவ வீரரின் 7 நாள் ஊதியம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
டெல்லி : பிரதமரை "மாண்புமிகு", "ஸ்ரீ" என்று குறிப்பிடாததால் ராணுவ வீரரின் 7 நாள் ஊதியம் ரத்து செய்யப்பட்டுள்ளது. பிரதமரை அவமரியாதை செய்துவிட்டதாக கூறி ராணுவ வீரர் மீது இந்த நடவடிக்கை பாய்ந்துள்ளது.
கடந்த பிப்ரவரி 21ம் தேதி மேற்குவங்கத்தின் நடியாவில் உள்ள மஹத்புரில் பிஎஸ்எஃப்ன் 15வது பட்டாலியன் தலைமையகம் உள்ளது. இங்கு ஜவான்களுக்கான தினசரி பயிற்சியான ஜீரோ பரேடு நடந்துள்ளது.

பரேடின் போது கான்ஸ்டபிள் சஞ்சீவ் குமார் "மோடி நிகழ்ச்சி" என்று குறிப்பிட்டு பேசியுள்ளார். சஞ்சீவ் குமாரின் இந்த பேச்சு பிரதமரை அவமரியாதை செய்வதாக உள்ளதாக பட்டாலியன் உயர் அதிகாரி கருதியுள்ளார்.
இதனால் அனுப் லால் பஹத், சஞ்சீவ் குமார் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க முடிவு எடுத்துள்ளார். இதன்படி சஞ்சீவ்குமார் மீது பிரிவு 40ன் கீழ் சட்டத்திற்கு புறம்பாக நன்னடத்தை மீறி செயல்பட்டதாக கூறி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மேலும் சஞ்சீவ் குமாரின் 7 நாட்கள் ஊதியமும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மாண்புமிகு என்று குறிப்பிடாததற்காக ராணுவ வீரர் மீது பாய்ந்துள்ள இந்த நடவடிக்கையானது மற்ற ராணுவ வீரர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications