மிஸ்டர் பிரான்சிஸ் '30.12.1899'ல் இருந்து நீங்க ஏன் பில்லே கட்டல?: அதிர வைத்த பி.எஸ்.என்.எல்.

கேரளாவைச் சேர்ந்தவர் பிரான்சிஸ். நிலுவையில் உள்ள தொலைபேசி கட்டண
த்தை உடனே செலுத்துமாறும் இல்லை என்றால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவருக்கு கடந்த ஒரு மாதமாக போன் மேல் போன் வந்துள்ளது. ஆனால் முதலில் அதை அவர் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.
இந்நிலையில் தான் அவருக்கு பி.எஸ்.என்.எல். நிறுவனத்தில் இருந்து ஒரு நோட்டீஸ் வந்துள்ளது. அதில் 30.12.1899 அன்று முதல் நிலுவையில் உள்ள தொலைபேசி கட்டணத்தை 3 மாதங்களுக்குள் கட்டவில்லை என்றால் இணைப்பு நிரந்தரமாக துண்டிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இதை பார்த்த பிரான்சிஸ் அதிர்ந்துவிட்டார்.
இது குறித்து அவர் கூறுகையில்,
முதலில் ஏராளமான போன் அழைப்புகள் வந்தது. அவை கால் சென்டரில் இருந்து வந்தன. நான் கட்டணத்தை செலுத்தியிருந்தால் தங்கள் அழைப்புகளை புறக்கணிக்குமாறு அவர்கள் தெரிவித்தனர். இந்நிலையில் ஒரு நூற்றாண்டு காலமாக நிலுவையில் உள்ள கட்டணத்தை செலுத்துமாறு கூறி நோட்டீஸ் வந்துள்ளது. அந்த நோட்டீஸில் எனது பி.எஸ்.என்.எல். இணைப்பு நிரந்தரமாக துண்டிக்கப்பட்டுவிட்டதாக கூறப்பட்டிருக்கிறது. ஆனால் எனது தொலைபேசி இந்த நிமிடம் வரை நன்றாக வேலை செய்கிறது. பி.எஸ்.என்.எல். அலுவலகத்தை தொடர்பு கொண்டபோது பில்லை கட்டியிருந்தால் இதை கண்டுகொள்ள வேண்டாம் என்று கஸ்டமர் கேர் அதிகாரிகள் தெரிவித்தனர் என்றார்.












Click it and Unblock the Notifications