தலித் சிறுமியை கடத்தி 4 நாட்களாக பலாத்காரம் செய்த மாயாவதி கட்சி தலைவர், உதவியாளர்கள்

Subscribe to Oneindia Tamil

பரேலி: உத்தர பிரதேசத்தில் சிறுமியை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மற்றும் அவரது உதவியாளர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

உத்தர பிரதேச மாநிலம் பதாவ்ன் மாவட்ட பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் ஜம்ஷெத் அலி மற்றும் அவரது உதவியாளர்கள் 7 பேர் கடந்த 6ம் தேதி உஸ்மான்பூர் கிராமத்தில் உள்ள பெட்ரோல் பங்க் அருகே சென்று கொண்டிருந்த தலித் சிறுமியை காரில் கடத்தினர்.

அவர்கள் சிறுமியை காரில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்ததோடு அவரை டெல்லி உள்ளிட்ட பல்வேறு ஊர்களுக்கு அழைத்துச் சென்று சீரழித்துள்ளனர். கடந்த சனிக்கிழமை அவர்களிடம் இருந்து தப்பித்த சிறுமி தனக்கு நேர்ந்த கொடுமை பற்றி தனது பெற்றோரிடம் தெரிவித்தார்.

இதையடுத்து சிறுமியின் பெற்றோர் மூத்த போலீஸ் அதிகாரியான மான் சிங் சவுகானை சந்தித்து நடந்த சம்பவம் பற்றி தெரிவித்தனர். இதையடுத்து மான் சிங்கின் உத்தரவின்பேரில் ஜம்ஷெத் அலி, ஜெய் குமார் தாகூர், சோட்டே லால், அபிஷேக் ஜாதவ், லோகேந்திர ஜாதவ், குன்வர் பான், மனோஜ் மற்றும் ஸ்வதேஷ் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும் சிறுமிக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+