Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பட்ஜெட் 2017: பண ஒழிப்பின் பலனை தொழிலதிபர்களுக்குத் தாரை வார்க்கப் போகும் வங்கிகள்!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: பிரதமர் மோடியின் பண ஒழிப்பு அறிவிப்புக்குப் பிறகு பெரும் பணக்காரர்களின் பணம் வங்கிகளுக்குப் போனதோ இல்லையோ... ஏழைகள், நடுத்தர மக்கள், உயர் நடுத்தர மக்களின் மொத்த சேமிப்பும் வங்கிகளுக்குப் போய்விட்டது.

வங்கிகளில் பணத்தை போட மட்டுமே முடியும். எடுக்க முடியாது அல்லது மிக மிகக் குறைவாகவே எடுக்க முடியும் என்ற நிலை கடந்த மூன்று மாதங்களாக நிலவி வந்தது. இப்போதுதான் ஓரளவு பணம் எடுக்க முடிகிறது.

Budget 2017: Banks to transfer demonetisation benefits to corporates

இப்படி மக்கள் பணத்தை மொத்தமாக தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டதன் மூலம் அனைத்து வங்கிகளின் ரொக்க இருப்பும் வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்துள்ளது. வட்டியில்லாத டெபாசிட்டுகளாக மாறியுள்ளது மக்களின் பெருமளவு ரொக்கப் பணம். இன்னொரு பக்கம் ரொக்கப் பரிமாற்றம் ஓரளவு குறைந்து டிஜிட்டல்மயத்துக்கு மாறிவிட்டனர் 20 சதவீத மக்கள்.

தங்களிடம் குவிந்துள்ள பணத்தை என்ன செய்யப் போகின்றன வங்கிகள்? அதற்கான விடையை இன்றைய பட்ஜெட் தாக்கலின்போது சொல்லிவிட்டார் நிதியமைச்சர் அருண் ஜெட்லி.

'வங்கிகளிடம் இதற்கு முன் இல்லாத அளவுக்கு பெரும் அளவு ரொக்கம் கையிருப்பில் உள்ளது. இதன் மூலம வங்கிகளின் கடன் அளிப்பு சக்தி பெருகியுள்ளது. பெரும் அளவில் கடன்கள் வழங்கப்படும்' என்று அறிவித்துள்ளார் அருண் ஜெட்லி.

கடன் கொடுப்பது என்றால் யாருக்குத் தருவார்கள்? சாதாரண குடிமகனுக்கோ, விவசாயிகளுக்கோ அல்ல. வங்கிகளில் இவர்கள் கடன் பெற வேண்டுமானால் படாத பாடு பட வேண்டும். ஆனால் பெரும் தொழிலதிபர்கள், கார்ப்பொரேட் நிறுவனங்களுக்குத்தான் இந்த வங்கிகளின் மக்களின் பணத்தை கடன்களாகத் தரவிருக்கிறார்கள். ஆனால் இப்படி தரப்படும் கடன்கள் முழுவதுமாக வசூலிக்கப்படுகிறதா? இல்லை என்பதை கடந்த ஆண்டு வெட்டவெளிச்சமானது.

கடந்த ஆண்டு மட்டும் 8000 கோடி ரூபாய் வரை வராக்கடன்களாக அறிவிக்கப்பட்டு தள்ளுபடி செய்யப்பட்டன. இந்தத் தொகையை கட்டத் தவறியவர்கள் பெரும் தொழிலதிபர்கள், பணக்காரர்கள், கார்ப்பொரேட் நிறுவனங்கள்.

இன்னொரு பக்கம் விஜய் மல்லையா மாதிரி பெரும் பணக்காரர்கள் ரூ 7000 கோடிக்கு மேல் கடன் தொகையைத் தராமல் இழுத்தடித்துவிட்டு, வெளிநாட்டில் பதுங்கிக் கொண்டுள்ளனர்.

அம்பானிகள், அதானிகள் போன்ற பெரும் பணக்காரர்களின் நிறுவனங்களிடமிருந்து இன்னும் வசூலிக்கப்படாமல் உள்ள வங்கிக் கடன் தொகை மட்டும் ரூ 1,24,000 கோடிகள்.

இதெல்லாம் வங்கிகளிடம் குறைவான ரொக்க இருப்பு இருந்த காலத்தில் வழங்கப்பட்ட கடன்கள்.

இப்போதோ வரலாறு காணாத ரொக்க இருப்பை வைத்துள்ளன வங்கிகள். பணத்தை அப்படியே வைத்துக் கொண்டிருப்பதால் எந்தப் பலனும் இல்லைதான். அதை சுழற்சியில் விட்டால்தான் வங்கிகளுக்கு வருவாய் கிடைக்கும். நாட்டின் தொழில்களும் நடக்கும்.

இவையெல்லாம் உண்மைதான் என்றாலும், பெரும் தொழிலதிபர்கள், நிறுவனங்களுக்கு தரப்படும் கடன்களை மட்டும் வங்கிகள் வசூலிக்கத் தவறுகின்றன. அரசியல்வாதிகள், ஆட்சியில் உள்ளவர்களின் செல்வாக்குடன், வராக்கடன் கடன் தள்ளுபடி என்ற பலனை பணக்காரர்கள் அனுபவிக்கிறார்கள்.

சில ஆயிரம் ரூபாய் வங்கிக் கடனைக் கட்டமுடியாத விவசாயிகளும் சாதாரண மக்களும் தூக்கில் தொங்கிக் கொண்டிருக்கிறார்கள்.

இனியாவது மக்கள் பணத்தை பொறுப்புடன் மீட்குமா வங்கிகள்?

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+