பட்ஜெட் 2018: விவசாயத்துறைக்கு அதிக முக்கியத்துவம் - வேளாண் சந்தைகள் அமைக்க ரூ. 2000 கோடி

உணவு பதப்படுத்தல் துறைக்கான முதலீடு 2 மடங்காக்கப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் 42 ஹைடெக் உணவு பூங்காக்கள் அமைக்கப்படும் என்று அருண் ஜெட்லி கூறியுள்ளார்.

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    மத்திய பட்ஜெட் 2018-விவசாயத் துறை- வீடியோ

    டெல்லி: விவசாயிகளின் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த ரூ.2,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி கூறியுள்ளார்.

    2018-19ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் நிதி அமைச்சர் அருண் ஜெட்லி காலை 11 மணிக்கு தாக்கல் செய்தார்.

    Budget 2018: Agricultural market fund of Rs 2,000 crore

    பாஜக அரசின் கடைசி முழுமையான பட்ஜெட், ஜிஎஸ்டி அமலாக்கத்துக்குப் பின் தாக்கல் செய்யப்படும் முதல் பட்ஜெட் ஆகிய காரணங்களால் இதில் முக்கிய அறிவிப்புகள் பல வெளியாகலாம் என எதிர்பார்க்கப்பட்டது.

    கடந்த 2014ஆம் ஆண்டு முதல் இதுவரை இல்லாத அளவிற்கு இந்த பட்ஜெட்டில் விவசாயத்துறைக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.

    உணவு பதப்படுத்தல் துறைக்கான முதலீடு 2 மடங்காக்கப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் 42 ஹைடெக் உணவு பூங்காக்கள் அமைக்கப்படும் என்று அருண் ஜெட்லி கூறியுள்ளார்.

    பட்ஜெட்டில் விவசாய துறைக்கு அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. முக்கிய அம்சங்கள்:

    விவசாயிகளுக்கான கடன் அட்டைகள் மீனவர்களுக்கும் வழங்கப்படும். மூங்கில் பயிரிடுவோருக்கும் மத்திய அரசின் உதவிகள் நீட்டிக்கப்படும்

    ஆபரேசன் க்ரீன் என்ற பசுமையாக்கும் திட்டத்துக்கு ரூ. 500 கோடி ஒதுக்கீடு. விவசாயிகளின் வருவாயை அதிகரிக்க நிதி ஆயோக் அதிக கவனம் செலுத்தும். விவசாய ஏற்றுமதி 100 பில்லியன் டாலர் மதிப்பை எட்டும். விவசாய ஏற்றுமதி மீதான கட்டுப்பாடுகள் தளர்தப்படும்.

    விவசாயிகளின் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த ரூ.2,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்தார். மேலும் விவசாய பொருட்களின் விளைப்பொருட்களின் விலையை உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளது என்று கூறினார்.

    இயற்கை வேளாண்மையை விரிவுபடுத்த ரூ.500 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மூங்கில் வளர்ப்பை ஊக்கப்படுத்த ரூ.1200 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. வேளாண் பதப்படுத்தும் தொழிலை மேம்படுத்த ரூ.1400 கோடி ஒதுக்கீடு மீன்வள மேம்பாடு, கால்நடை பெருக்க திட்டத்துக்கு ரூ.10,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றார்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+