பட்ஜெட் அறிவிப்பு: செல்போன்களின் இறக்குமதி வரி 20% ஆக உயர்வு!
செல்போன்களின் இறக்குமதி வரி 20 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
Recommended Video
டெல்லி: செல்போன்களின் இறக்குமதி வரி 20 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசின் பொது பட்ஜெட் நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்பட்டது. நிதியமைச்சர் அருண்ஜேட்லி இதனை தாக்கல் செய்தார்.
பொது பட்ஜெட்டுடன் சேர்த்து ரயில்வே பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்பட்டது. மோடி அரசின் கடைசி பொது பட்ஜெட் இது என்பதால் வரி விதிப்பில் மாற்றங்கள் வரும் என எதிர்ப்பார்க்கப்பட்டது.
ஆனால் இந்த பட்ஜெட் எதிர்ப்பார்த்த அளவுக்கு இல்லை என கருதப்படுகிறது. இந்த பட்ஜெட் நடுத்தர மக்களுக்கும் மாத சம்பளதாரர்களுக்கும் பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது.
இந்நிலையில் செல்போன்களுக்கான இறக்குமதி வரியை மத்திய அரசு உயர்த்தியுள்ளது. இறக்குமதி செய்யப்படும் செல்போனிகளின் வரி 15% லிருந்து 20% ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிக்கும் வகையில் இறக்குமதி செய்யப்படும் செல்போன்களின் வரி உயர்த்தப்பட்டுள்ளதாக தெரிகிறது. இதனால் இறக்குமதி செய்யப்படும் செல்போன்களின் வரி அதிகரிக்கும் என தெரிகிறது.