மாட்டிறைச்சி விவகாரம்.. எருமை மாட்டிற்கு மட்டும் விலக்களிக்க மத்திய அரசு பரிசீலனை

மாடுகளை விற்க தடைவிதிக்கப்பட்ட உத்தரவில் மாற்றம் கொண்டுவர மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

Subscribe to Oneindia Tamil

டெல்லி: நாடு முழுவதும் கடும் எதிர்ப்புக் கிளம்பியுள்ளதால், இறைச்சிக்காக கால்நடைகளை விற்கக்கூடாது எனும் சட்டத்திலிருந்து எருமைகளுக்கு விலக்கு அளிக்க மத்திய அரசு பர்சீலித்து வருகிறது.

பசு, எருமை, ஒட்டகம் போன்றவற்றை இறைச்சிகாக சந்தைகளில் விற்கவோ, வாங்கவோ மத்திய அரசு தடைவிதித்துள்ளது. இந்த உத்தரவுக்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளது.

Buffaloes likely to be removed from 'no slaughter' list

புதுச்சேரி, கர்நாடாகா, மேற்கு வங்கம் மற்றும் கேரளா உள்ளிட்ட மாநிலங்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளன. தடையை அமல்படுத்த மாட்டோம் என்று அம்மாநிலங்களின் முதல்வர்கள் அறிவித்துள்ளனர்.

தொடர்ந்து நாடு முழுவதும் இந்த உத்தரவுக்கு பலத்த எதிர்ப்பு நிலவி வருகிறது. மத்திய அரசின் தடைக்கு எதிராக கேரளாவில் பெரிய அளவில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. தமிழகத்திலும் மதுரை, சேலம், திருச்சி, கோவை உள்ளிட்ட தமிழகத்தின் பல பகுதிகளில் போராட்டம் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் மாடுகளை விற்க தடைவிதிக்கப்பட்ட உத்தரவில் மாற்றம் கொண்டுவர மத்திய அரசு முடிவு செய்துள்ளது. எருமை மாடுகளை மட்டும் பட்டியலிலிருந்து நீக்குவதற்கு மத்திய அரசு பரிசீலிப்பதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+