தோண்ட தோண்ட அரசு ஊழியர் வீட்டில் பணக்கட்டு.. எண்ணி முடிக்கவே தலைசுற்றிய ஒடிஷா அதிகாரிகள்! பின்னணி?

Subscribe to Oneindia Tamil

புவனேஸ்வர்: அரசு வேலையில் சேர்ந்தபோது வாங்கிய மாத சம்பளம் என்னவோ வெறும் 6 ஆயிரம் ரூபாய் தான். ஆனால், இன்று அவரது வீட்டில் கட்டுக்கட்டாக சிக்கிய பணத்தையும், குவிந்து கிடக்கும் சொத்து ஆவணங்களையும் பார்த்து மாநில லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகளே வாயடைத்துப் போய் நின்று கொண்டிருக்கிறார்கள். ஒடிஷாவில் அரசு இன்ஜினியர் ஒருவரின் வீட்டில் நடத்தப்பட்ட அதிரடி சோதனை தான் இப்போது ஒட்டுமொத்த தேசத்தையும் உற்று நோக்க வைத்திருக்கிறது.

ஒடிஷாவில் முதல்வர் மோகன் சரண் மஜி தலைமையிலான பாஜக அரசு அமைந்து, பல்வேறு அதிரடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

Odisha Corruption Government Officer Vigilance Raid Cash Seizure Engineer

ஒடிஷா அரசு ஊழியர்

இந்த சூழலில், அங்குள்ள மாநில பழங்குடியினர் மேம்பாட்டு முகமையின் உதவி நிர்வாக இன்ஜினியராக பணியாற்றி வரும் வைகுண்டநாத் பெஹரா என்பவர் மீது, வருமானத்திற்கு அதிகமாக பல கோடி ரூபாய் சொத்து சேர்த்திருப்பதாக லஞ்ச ஒழிப்புத்துறைக்கு அடுத்தடுத்து புகார்கள் குவிந்தன. இந்த புகார்களின் பின்னணியில் இருக்கும் உண்மைகளை உடைக்க முடிவு செய்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார், நேற்று முன்தினம் அதிகாலையிலேயே களத்தில் இறங்கினார்கள்.

சாதாரண சோதனை என்று நினைத்து சென்ற அதிகாரிகளுக்கு, அங்கே மிகப்பெரிய அதிர்ச்சி காத்திருந்தது... புவனேஸ்வர், பாலசோர், ஜாஜ்பூர், பாலிகுடா என வைகுண்டநாத்துக்கு சொந்தமான 9 இடங்களில் ஒரே நேரத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அதிரடியாக நுழைந்து சோதனையை தொடங்கினர்.


வைகுண்டநாத் வீடுகள்

அப்போது வைகுண்டநாத்தின் வீடு மற்றும் வங்கி லாக்கர்களில் இருந்து மட்டும் கணக்கில் வராத ரூபாய் 2.40 கோடி ரொக்கப் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. பணத்தை எண்ணி முடிப்பதற்குள் அதிகாரிகளுக்கு தலைசுற்றல் வந்துவிட்டது.

ஆனால் இது வெறும் ஆரம்பம் தான் என்பது அடுத்தடுத்த தேடுதலில் தெரியவந்தது. வைகுண்டநாத் பெயரில் 5 பிரம்மாண்ட அப்பார்ட்மென்ட்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இதில் ஸ்பெஷல் என்னவென்றால், இதில் 4 அடுக்குமாடி கட்டிடங்கள் தலைநகர் புவனேஸ்வரிலேயே கட்டப்பட்டுள்ளன. இவற்றின் இப்போதைய சந்தை மதிப்பு மட்டுமே 20 கோடி ரூபாய்க்கும் மேல் இருக்கும் என கணக்கிடப்பட்டுள்ளது. இது தவிர, புவனேஸ்வர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் 14 கோடி ரூபாய் மதிப்புள்ள 13 வீட்டு மனைகளுக்கான சொத்து ஆவணங்களும் அதிகாரிகளிடம் சிக்கின. மேலும் 341 கிராம் தங்க நகைகள் மற்றும் 45 லட்சம் ரூபாய் வங்கி வைப்புத்தொகையையும் அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.


6000 ரூபாய் சம்பளம்

கடந்த 1999ம் ஆண்டில் வெறும் 6,000 ரூபாய் மாத சம்பளத்தில் இளநிலை இன்ஜினியராக தான் வைகுண்டநாத் தனது அரசு பணியை ஆரம்பித்துள்ளார்.. அதன் பிறகு 2016ல் உதவி இன்ஜினியராகவும், இந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் உதவி நிர்வாக இன்ஜினியராகவும் அடுத்தடுத்து பதவி உயர்வுகளை பெற்றிருக்கிறார்..

அப்படியானால் தனது 20 ஆண்டுகால அரசுப் பணியில், பழங்குடியின மக்களின் மேம்பாட்டுக்காக அரசு ஒதுக்கிய நிதியையும், தன் அதிகாரத்தையும் தவறாக பயன்படுத்தி, அவர் எப்படியெல்லாம் கோடீஸ்வரராக உருவெடுத்துள்ளார் என்பது இந்த சோதனையின் மூலம் அம்பலமாகியுள்ளது.

ஏழை மக்களின் முன்னேற்றத்திற்காக உழைக்க வேண்டிய ஒரு அரசு அதிகாரி, கோடிக்கணக்கில் சொத்துக்களை குவித்து சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வந்த சம்பவம் ஒடிஷாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இப்போது லஞ்ச ஒழிப்புத் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ள வைகுண்டநாத்திடம், இந்த இமாலய சொத்துக்கள் எப்படி வந்தன, இதன் பின்னணியில் வேறு யாருக்கெல்லாம் தொடர்பிருக்கிறது என்ற கோணத்தில் அதிகாரிகள் தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.. இதில் இன்னும் என்னென்ன ரகசியங்கள் வெளியே வரப்போகிறதோ என்று ஒடிஷா அரசு வட்டாரமே இப்போது கலக்கத்தில் இருக்கிறதாம்..!!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+