தெலுங்கானாவில் பேருந்து கவிழ்ந்து விபத்து.. பலி எண்ணிக்கை 52 ஆக உயர்வு
தெலுங்கானாவில் மலைப் பாதையில் பேருந்து கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் 52 பேர் பலியாகி உள்ளனர்.
Recommended Video
ஹைதராபாத்: தெலுங்கானாவில் மலைப் பாதையில் பேருந்து கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் 52 பேர் பலியாகி உள்ளனர்.
தெலுங்கானா அருகே இருக்கும் கொண்டகாட்டு என்ற மலை பகுதியில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. குறுகலான பாதையில் சென்ற பேருந்து சாலை விளிம்பில் சென்று விழுந்துள்ளளது.
பேருந்து கவிழ்ந்து விபத்து ஏற்பட்டதில் 52 பேர் பலியாகி உள்ளனர். பேருந்து விபத்தில் மொத்தம் 15க்கும் அதிகமா பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.
அங்கு மீட்பு குழுவினர், தீயணைப்பு படையினர் விரைந்துள்ளனர். பேருந்தில் இருந்த மற்றவர்களின் நிலை என்னவென்று தெரியவில்லை.
படுகாயம் அடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அச்சம் ஏற்பட்டுள்ளது. இதில் பலர் மருத்துவமனையில் கவலைக்கிடமாக உள்ளனர்.
இறந்தவர்கள் உடல் பிரதேச பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. பள்ளம் ஆழமாக இருப்பதால், மீட்பு பணியில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.