நாடு முழுக்க 4 லோக்சபா, 8 சட்டசபை தொகுதிகளிலும் முடிந்தது வாக்குப்பதிவு! 22ல் வாக்கு எண்ணிக்கை
டெல்லி: நாடு முழுவதிலும் இன்று 4 லோக்சபா தொகுதிகளிலும், தமிழகத்தின் 3 உட்பட 8 சட்டசபை தொகுதிகளிலும் இன்று காலை 7 மணி முதல் மாலை 5 மணிவரை இடைத்தேர்தல் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்தது.
மத்தியபிரதேசம், மேற்கு வங்கம் மற்றும் அஸ்ஸாமில் உள்ள மொத்தம் 4 லோக்சபா தொகுதிக்கும், 6 மாநிலங்களில் உள்ள 8 சட்ட சபை தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு நடைபெற்றது. தமிழ்நாடு, புதுச்சேரி, மேற்கு வங்கம், திரிபுரா, அஸ்ஸாம், அருணாச்சலபிரதேசம், மத்திய பிரதேசம் ஆகியவை அந்த மாநிலங்களாகும்.

தமிழகத்தில் தஞ்சாவூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் ஆகிய சட்டசபை தொகுதிகளுக்கும், புதுச்சேரி நெல்லித்தோப்பு தொகுதியிலும் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்றது. இதேபோன்று அருணாச்சலபிரதேசம், அஸ்ஸாம், திரிபுரா ஆகிய மாநிலங்களில் உள்ள 5 சட்டசபை தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்றது.
இதில் ம.பி.யின் ஷாடால், அஸாமின் லகிம்பூர் ஆகியவை பாஜக வென்ற தொகுதிகளாகும். தொகுதிகள் முழுவதும் உள்ளூர் போலீஸாருடன் துணை ராணுவப் படையினரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். மத்திய அரசு உயர் மதிப்புள்ள ரூபாய் நோட்டுகளை புழக்கத்திலிருந்து நீக்கியதை அடுத்து, இந்த தேர்தல்கள் நடப்பதால் மக்கள் மனநிலையை இத்தேர்தல் பிரதிபலிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 22ம் தேதி நடக்கும் வாக்கு எண்ணிக்கையின்போது அது தெரியவரும்.
60-நாடு முழுவதிலும் இன்று 4 லோக்சபா தொகுதிகளிலும், தமிழகத்தின் 3 உட்பட 8 சட்டசபை தொகுதிகளிலும் இன்று காலை 7 மணி முதல் மாலை 5 மணிவரை இடைத்தேர்தல் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்தது.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!












Click it and Unblock the Notifications