தேசமே எதிர்த்த சட்டம்.. “சிஏஏ 7 நாட்களில் அமல்படுத்தப்படும்!” பரபரப்பை பற்ற வைத்த மத்திய அமைச்சர்
கொல்கத்தா: நாடு முழுவதும் 7 நாட்களுக்குள் குடியுரிமை திருத்தச் சட்டம் அமலுக்கு கொண்டு வரப்படும் என மத்திய அமைச்சர் சாந்தனு தாக்கூர் தெரிவித்து உள்ளார்.
பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகளில் சிறுபான்மையினராக வசிக்கும் இந்து, சீக்கியம், பவுத்தம், சமணம், பார்சி, கிறிஸ்தவம் ஆகிய 6 மதங்களைச் சேர்ந்தவர்கள் மத ரீதியிலான துன்புறுத்தலின் காரணமாக அங்கிருந்து வெளியேறி இந்தியாவில் அகதியாக தஞ்சம் புகுந்தால் அவர்களுக்கு குறிப்பிட்ட சில ஆண்டுகள் கழித்து குடியுரிமை வழங்க மத்திய பாஜக அரசு குடியுரிமை திருத்தச் சட்டத்தை கொண்டு வந்தது.

கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் இந்த சிஏஏ எனப்படும் குடியுரிமை திருத்த சட்ட மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேறி குடியரசுத் தலைவர் ஒப்புதலுடன் சட்டமானது. 2020 ஆம் ஆண்டு ஜனவரி 1 ஆம் தேதி முதல் இந்த சட்டம் அமலுக்கு வருவதாக இருந்தது. ஆனால், இந்த சட்டம் நிறைவேற்றப்பட்டால் என்பிஆர் எனப்படும் தேசிய மக்கள் தொகை பதிவேட்டில் எழுப்பப்படும் கேள்விகள் மாற்றப்படும், என்.ஆர்.சி. எனப்படும் தேசிய குடிமக்கள் பதிவேட்டில் பலரது குடியுரிமை பறிக்கப்படும் அபாயம் உள்ளது எனக் கூறி பல்வேறு தரப்பினர் இதற்கு எதிராக போராட்டங்களை முன்னெடுத்தனர்.
குறிப்பாக இந்த சட்டத்தில் குறிப்பிடப்பட்டு உள்ள மதங்களில் இஸ்லாம் இடம்பெறாததை சுட்டிக்காட்டி ஒரு மதத்தினருக்கு எதிராக இச்சட்டம் கொண்டு வரப்பட்டதாக விமர்சனம் எழுந்தது. இலங்கையும் இதில் இடம்பெறாத காரணத்தால் ஈழத் தமிழர்களுக்கும் இதனால் பயனில்லை என்ற விமர்சனம் எழுந்தது. இதனை கண்டித்து நாடு முழுவதும் இஸ்லாமியர்கள், மாணவர்கள், பல்வேறு சமூக அமைப்புகள், அரசியல் இயக்கங்கள் போராட்டங்களை முன்னெடுத்தனர். டெல்லி தொடங்கி தமிழ்நாடு வரை ஷாகின் பாக் போராட்டங்கள் பல நாட்களாக நடைபெற்றன.
இதனை தொடர்ந்து வந்த கொரோனா பெருந்தொற்று காரணமாக பிறப்பித்த ஊரடங்கு உத்தரவு காரணமாக போராட்டங்கள் நிறுத்தப்பட்டாலும் இன்று வரை இதற்கான எதிர்ப்பு என்பது மக்கள் மத்தியில் தொடர்கிறது. ஆனால் மத்திய அரசோ இதற்கான விதிகள் வகுக்கப்பட்ட பிறகு இந்த சட்டம் அமல்படுத்தப்படும் என அறிவித்தது. இதுவரை இந்த சட்டம் அமலுக்கு வரவில்லை. தற்போது பாஜக அரசின் ஆட்சிக் காலம் நிறைவடைந்து 2024 மக்களவைத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள சூழலில் குடியுரிமை திருத்தச் சட்டம் மீண்டும் அமல்படுத்தப்படும் என மத்திய இணை அமைச்சர் சாந்தனு தாக்கூர் தெரிவித்து உள்ளது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
மேற்கு வங்க மாநிலத்தில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பேசிய அவர், "அயோத்தியில் ராமர் கோயில் திறக்கப்பட்டு இருக்கிறது. குடியுரிமை திருத்தச் சட்டத்தை திடீரென அமல்படுத்துவது நாட்டில் பதட்டமான சூழ்நிலை உருவாக்கி இருக்கலாம். சிஏஏ சட்டம் மதம், சமூகம், கொள்கைகளை மனதில் வைத்து அமலுக்கு வரும். மத்திய உள்துறை அமைச்சகம் இந்த முடிவை எடுத்துள்ளது. 7 நாட்களுக்குள் இந்தியாவில் சிஏஏ அமல்படுத்தப்படும் என நான் உங்களுக்கு உறுதி அளிக்கிறேன். மத்திய அரசின் பிரச்னை. தனியாக இதை மேற்கு வங்க மாநிலத்தில் அமல்படுத்த தேவை இல்லை. முதலமைச்சரிடமும் இது பற்றி பேச வேண்டிய அவசியமில்லை." என்று தெரிவித்து உள்ளார்.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications