குடியுரிமை மசோதா: அஸ்ஸாமில் பாதுகாப்பு படையினருடன் போராட்டக்காரர்கள் மோதல்- ரயில் சேவை முடக்கம்
Recommended Video
குவஹாத்தி: அஸ்ஸாமில் குடியுரிமை சட்ட திருத்த மசோதாவுக்கு எதிரான போராட்டக்காரர்களுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் இடையே பல இடங்களில் மோதல் வெடித்ததால் அப்பகுதிகள் போர்க்களமாகி உள்ளன.
குடியுரிமை சட்ட திருத்த மசோதாவால் தங்களது பாரம்பரிய நிலம், அகதிகளுக்கு தாரை வார்க்கப்படும் அபாயம் உள்ளது என்பது வடகிழக்கு மாநில மக்களின் அச்சம். தங்களது இனக்குழுக்களின் அடையாளத்தை பாதுகாப்பதில் தொடர்ந்து போராடுகிறவர்கள் வடகிழக்கு இன குழுக்கள்.

இதனால்தான் இம்மாநிலங்கள் பலவற்றிலும் இந்திய குடிமக்களாக இருந்தாலும் கூட சிறப்பு அனுமதி பெற்றுதான் உள்ளே நுழைய முடியும் என்கிற நடைமுறை அமலில் இருக்கிறது. ஏற்கனவே அஸ்ஸாமில் தேசிய குடிமக்கள் பதிவேடு நடைமுறையால் பெரும் பதற்றம் ஏற்பட்டிருந்தது.
இந்நிலையில் குடியுரிமை சட்ட திருத்த மசோதா ஒட்டுமொத்தமாக வடகிழக்கு மாநிலங்களில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. அஸ்ஸாம், திரிபுரா உள்ளிட்ட மாநிலங்களில் தொடர் முழு அடைப்புப் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
பொதுமக்கள் பல்லாயிரக்கணக்கில் ஒன்று திரண்டு தீப்பந்தங்களுடன் பேரணியாக செல்கின்றனர். கல்வி நிறுவனங்கள், வர்த்தக நிறுவனங்கள் இழுத்து மூடப்பட்டிருக்கின்றன. சாலைகளில் வாகனப் போக்குவரத்து அனுமதிக்கப்படவில்லை.
வாகனங்களை தடுத்தவர்களை போலீசார் அப்புறப்படுத்த முயற்சித்தனர். இதனால் போராட்டக்காரர்களுக்கும் போலீசாருக்கும் இடையே பல இடங்களில் மோதல்கள் வெடித்தன. இதனிடையே திரிபுராவில் பல இடங்களில் இணையசேவைகள் முடக்கப்பட்டிருக்கின்றன.
தண்டவாளங்களை பல இடங்களில் போராட்டக்காரர்கள் கைப்பற்றி உள்ளனர். இதனால் வடகிழக்கு மாநிலங்களில் ரயில் சேவையும் முடங்கியுள்ளது.
-
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு












Click it and Unblock the Notifications