பயங்கரவாதத்தில் பலியானால் இழப்பீடு ரூ.5 லட்சமாக அதிகரிப்பு: மத்திய அமைச்சரவை ஒப்புதல்
டெல்லி: பயங்கரவாதம் மற்றும் வகுப்புவாத வன்முறையால் உயிரிழக்கும் அப்பாவி மக்களுக்கு வழங்கப்படுகிற இழப்பீட்டை ரூ.3 லட்சத்தில் இருந்து ரூ.5 லட்சமாக உயர்த்துவதற்கு மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் டெல்லியில் நேற்று மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. எல்லை தாண்டிய துப்பாக்கிச்சூடு, கண்ணிவெடி தாக்குதல், குண்டுவீச்சு, குண்டுவெடிப்பு, பயங்கரவாத தாக்குதல்கள், நக்சலைட் மற்றும் மாவோயிஸ்ட் தாக்குதல்கள் போன்றவற்றில் உயிரிழக்கும் அப்பாவி மக்களுக்கு வழங்கப்படுகிற இழப்பீட்டை ரூ.3 லட்சத்தில் இருந்து ரூ.5 லட்சமாக உயர்த்துவதற்கு மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.

இது உடனடியாக அமல் அமல்படுத்தப்பட்டது. தாக்குதல்களில் உயிரிழக்கும் நபர்களின் குடும்பத்தினருக்கு இந்த இழப்பீடு அளிக்கப்படும்.
அதேபோல, மேலே குறிப்பிடப்பட்ட தாக்குதல்களில் சிக்கி, 50 சதவீதம் அல்லது அதற்கு மேல் ஊனம் அடைகிறவர்களுக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்கப்படும். இதுவரை ரூ.3 லட்சம் மட்டுமே இழப்பீடாக பெற்று வந்த நிலையில், இழப்பீட்டுத் தொகை ரூ.5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. கடந்த 2008-ம் ஆண்டு முதல் பயங்கரவாதத்தினால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இதுவரை ரூ.35.89 கோடி இழப்பீடாக வழங்கப்பட்டுள்ளதாம்.
-
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
எடப்பாடி பழனிசாமின்னா சும்மாவா.. வீட்டுக்குள் போன 3 அரசியல்வாதிகள்.. ஒரே நொடியில் ஆடிப்போன வேலுமணி -
மகளிருக்கு ரூ.2,500, விடியல் பயணம் திட்டம் எப்போது அமலாகும்? அமைச்சர் செங்கோட்டையன் கொடுத்த பதில்












Click it and Unblock the Notifications