பயங்கரவாதத்தில் பலியானால் இழப்பீடு ரூ.5 லட்சமாக அதிகரிப்பு: மத்திய அமைச்சரவை ஒப்புதல்
டெல்லி: பயங்கரவாதம் மற்றும் வகுப்புவாத வன்முறையால் உயிரிழக்கும் அப்பாவி மக்களுக்கு வழங்கப்படுகிற இழப்பீட்டை ரூ.3 லட்சத்தில் இருந்து ரூ.5 லட்சமாக உயர்த்துவதற்கு மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் டெல்லியில் நேற்று மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. எல்லை தாண்டிய துப்பாக்கிச்சூடு, கண்ணிவெடி தாக்குதல், குண்டுவீச்சு, குண்டுவெடிப்பு, பயங்கரவாத தாக்குதல்கள், நக்சலைட் மற்றும் மாவோயிஸ்ட் தாக்குதல்கள் போன்றவற்றில் உயிரிழக்கும் அப்பாவி மக்களுக்கு வழங்கப்படுகிற இழப்பீட்டை ரூ.3 லட்சத்தில் இருந்து ரூ.5 லட்சமாக உயர்த்துவதற்கு மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.

இது உடனடியாக அமல் அமல்படுத்தப்பட்டது. தாக்குதல்களில் உயிரிழக்கும் நபர்களின் குடும்பத்தினருக்கு இந்த இழப்பீடு அளிக்கப்படும்.
அதேபோல, மேலே குறிப்பிடப்பட்ட தாக்குதல்களில் சிக்கி, 50 சதவீதம் அல்லது அதற்கு மேல் ஊனம் அடைகிறவர்களுக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்கப்படும். இதுவரை ரூ.3 லட்சம் மட்டுமே இழப்பீடாக பெற்று வந்த நிலையில், இழப்பீட்டுத் தொகை ரூ.5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. கடந்த 2008-ம் ஆண்டு முதல் பயங்கரவாதத்தினால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இதுவரை ரூ.35.89 கோடி இழப்பீடாக வழங்கப்பட்டுள்ளதாம்.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications