ஆந்திராவில் குடியரசுத் தலைவர் ஆட்சி: மத்திய அமைச்சரவை ஒப்புதல்
Subscribe to Oneindia Tamil
டெல்லி: ஆந்திராவில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த பிரதமர் தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.

ஆந்திராவை இரு மாநிலங்களாக பிரிப்பதற்கான சட்ட மசோதா நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் சமீபத்தில் நிறைவேறியது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அம்மாநிலத்தின் முதலமைச்சர் கிரண்குமார் ரெட்டி ராஜினாமா செய்தார்.
இதைத்தொடர்ந்து, ஆந்திராவில் புதிய முதலமைச்சரை நியமிக்கலாமா அல்லது குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்தலாமா என்று காங்கிரஸ் தலைமை ஆலோசித்து வந்தது.
இந்நிலையில், பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில், டெல்லியில் இன்று அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இதில் ஆந்திராவில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமைப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டு, அதற்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications