விலை உயர்வை தடுக்க 1.5 லட்சம் டன் பருப்பு வகைகளை இருப்பு வைக்க மத்திய அரசு முடிவு
டெல்லி: பருப்பு விலை உயர்வைக் கட்டுப்படுத்த ஒன்றரை லட்சம் டன் பருப்பு வகைகளைக் கொள்முதல் செய்து இருப்பு வைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
கடந்த சில மாதங்களாக நாட்டில் பருப்பு விலை விண்ணை முட்டும் அளவிற்கு அதிகரித்து வருகிறது. இதனால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். எனவே, பருப்பை பதுக்குபவர்கள் மீது அதிரடி நடவடிக்கை எடுத்த மத்திய அரசு, பருப்பு வகைகளை இறக்குமதி செய்து குறைந்த விலையில் மக்களுக்கு விற்பனை செய்து வருகிறது.

இந்நிலையில், பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. அதில், பருப்பு விலை உயர்வைக் கட்டுப்படுத்த ஒன்றரை லட்சம் டன் பருப்பு வகைகளைக் கொள்முதல் செய்து, அதனை இருப்பு வைக்க பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவை கமிட்டி ஒப்புதல் அளித்தது.
இந்த பருப்பு வகைகளானது நடப்பு ஆண்டிலேயே சந்தை விலையில் வாங்கி இருப்பு வைக்கப்படும். பின்னர் பருப்பு விலை கடுமையாக உயரும் போது, அவை விற்பனைக்காக சந்தைக்கு அனுப்பப்படும்.
பருப்பு விலை, குறைந்தபட்ச ஆதரவு விலையை விட கீழே இறங்கினால், குறைந்தபட்ச ஆதரவு விலைக்கே பருப்பு வாங்குவது என்றும் முடிவு செய்யப்பட்டது. அதோடு, தேவைப்பட்டால் பருப்பு வகைகளை வெளிநாடுகளில் இருந்தும் இறக்குமதி செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதேபோல், தேசிய நீர்வழித்தட மசோதாவில் திருத்தங்கள் செய்வதற்கும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. தற்போது 5 தேசிய நீர்வழித்தடங்கள் உள்ள நிலையில், தமிழ்நாட்டில் ஒரு நீர்வழித்தடம், கேரளாவில் 3 நீர்வழித்தடம், கர்நாடகாவில் 5 நீர்வழித்தடம் உள்பட 106 நீர்வழித்தடங்கள் தேசிய நீர்வழித்தடங்களாக அறிவிக்கப்பட உள்ளன.
இதன்மூலம், தேசிய நீர்வழித்தடங்களின் எண்ணிக்கை 111 ஆக உயரும். இந்த அறிவிப்பால், மத்திய அரசுக்கு உடனடியாக நிதிச்சுமை எதுவும் ஏற்படாது என்பது குறிப்பிடத்தக்கது.
ரியல் எஸ்டேட் (ஒழுங்குமுறை மற்றும் மேம்பாடு) மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. வீடு வாங்குவோரின் நலன் கருதி, இந்த மசோதா கொண்டுவரப்படுகிறது. வீடுகள் கட்டுமானத்தை உரிய நேரத்தில் முடித்துக் கொடுப்பதற்கும், ரியல் எஸ்டேட் பரிவர்த்தனை ஒழுங்குபடுத்த மாநிலங்கள் தோறும் ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையம் அமைப்பதற்கும் இம்மசோதா வகை செய்யும்.
மத்திய அமைச்சரவையில் இந்த ஒப்புதலைத் தொட்ர்ந்து, நாடாளுமன்ற கூட்டத்தொடரில் இம்மசோதா பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படும்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications