கரப்பான் பூச்சி நெளிவதை வீடியோ எடுத்த கஸ்டமருக்கு பளார் விட்ட 'காபி டே' பெண் ஊழியர்.. ஷாக் வீடியோ
ஜெய்ப்பூர்: காபி டே காபி ஷாப்பில் கரப்பான் பூச்சி இருந்ததை படம் பிடித்த கஸ்டமரை பெண் ஊழியர் படு பயங்கரமாக தாக்கிய சம்பவம் வீடியோவாக வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ராஜஸ்தான் மாநில தலைநகர் ஜெயப்பூரில் புகழ்பெற்ற 'கபே காபி டே' காபி ஷாப் உள்ளது. இங்குள்ள குளிர்சாதன பெட்டியில் கரப்பான் பூச்சி மற்றும் சில பூச்சிகள் காணப்பட்டுள்ளன.
இதை அங்கு வந்த சட்டக்கல்லூரி மாணவர் நிகில் ஆனந்த் சிங் என்பவர் தனது மொபைலில் படம் பிடித்துள்ளார். இதைக்கண்ட கடை பெண் ஊழியர் ஒருவர் அந்த மாணவரை அடித்துள்ளார்.
பயங்கர அடி
முன்னதாக, நிகில் ஆனந்த் சிங் வீடியோ எடுப்பதை அந்த பெண் ஊழியரும் செல்போன் வீடியோவில் பதிவு செய்தபடி இருந்தார். மெனு கார்டை வைத்து கரப்பான் பூச்சிகளை மறைத்து வைத்திருந்ததை நிகில் ஆனந்த் சிங் அம்பலப்படுத்தியதும் அந்த பெண் பளார் என அடித்து துவைத்துவிட்டார்.
|
வீடியோ வெளியீடு
அதிர்ச்சியடைந்த அந்த மாணவர் தனது மொபைலில் எடுத்த வீடியோவை தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டார். மேலும் இதுகுறித்து அவர் கூறியதாவது:-
குற்றச்சாட்டு
பிரிட்ஜில் கரப்பான்பூச்சி மற்றும் சில பூச்சிகள் காணப்பட்டன. இதனை ஊழியர்களிடம் கூறியும் அவர்கள் அலட்சியமாக இருந்தனர். அந்த பிரிட்ஜை மெனு கார்டை வைத்து மறைத்தனர், என்று கூறினார்.
|
விளக்கம்
இதுகுறித்து கபே காபி டே நிர்வாகம் டிவிட்டரில் கூறுகையில், இந்த சம்பவம் எங்களது கவனத்திற்கு வந்துள்ளது. சம்பவம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது என தெரிவித்துள்ளனர்.