ராஜஸ்தான் மாநிலத்தின் பாரம்பரிய விலங்காக ஒட்டகம்!
Subscribe to Oneindia Tamil
ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலத்தின் பாரம்பரிய விலங்காக ஒட்டகத்தை பிரகடனப்படுத்த அம்மாநில ஆளும் பாரதிய ஜனதா அரசு முடிவெடுத்துள்ளது.
ராஜஸ்தான் மாநிலத்தில் ஒட்டகங்கள் வேளாண் பணிகள் உட்பட பல்வேறு பணிகளுக்குப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால் இறைச்சிக்காக அதிகம் பயன்படுத்தப்படுவது கிடையாது.

தற்போது ஒட்டகத்தை ராஜஸ்தான் அரசு தமது மாநிலத்தின் பாரம்பரிய விலங்காக பிரகடனப்படுத்த இருக்கிறது. முதல்வர் வசுந்தரா ராஜே தலைமையில் நேற்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
அப்படி பிரகடனப்படுத்துவதன் மூலம் ஒட்டகங்களைப் பாதுகாக்க தேவையான சட்டங்கள் மற்றும் விதிமுறைகளை உருவாக்கப்படும். சட்டவிரோதமாக வெளிநாடுகளுக்கு ஒட்டகங்கள் கடத்திச் செல்லப்படுவது தடுக்கப்படும்.












Click it and Unblock the Notifications