3வது கட்ட வாக்குப் பதிவு நடைபெறும் 91 தொகுதிகளில் பிரசாரம் இன்றுடன் ஓய்ந்தது!!
டெல்லி: லோக்சபா தேர்தலில் 3வது கட்ட வாக்குப் பதிவு நடைபெற உள்ள 91 தொகுதிகளில் இன்று மாலையுடன் பிரசாரம் ஓய்ந்தது.
நாட்டின் 16வது லோக்சபா தேர்தல் 9 கட்டமாக நடைபெறுகிறது. முதல் கட்டமாக நேற்று 6 தொகுதிகளில் நடைபெற்றது. 2வது கட்டமாக நாளை 6 தொகுதிகளில் வாக்குப் பதிவு நடைபெறது.
3ம் கட்டமாக நாளை மறுநாள் 10-ந் தேதி வாக்குப் பதிவு நடைபெறும் கேரளா உள்பட 14 மாநிலங்களில் உள்ள 91 தொகுதிகளில் இன்று மாலையுடன் பிரசாரம் ஓய்ந்துவிட்டது.
91 லோக்சபா தொகுதிகள்
பீகாரில் 6, ஹரியானா, மகாராஷ்டிரா, ஒடிஷா, உத்தரபிரதேசம் மாநிலங்களில் தலா 10, ஜார்க்கண்டில் 4, கேரளாவில் 20, மத்திய பிரதேசத்தில் 9, சத்தீஸ்கர், இமாச்சல பிரதேசம், அந்தமான் நிகோபர், சண்டிகர், லட்சத்தீவுகள் ஆகியவற்றில் தலா 1, டெல்லி 7 என 14 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் உள்ள 91 லோக்சபா தொகுதிகள் ஏப்ரல் 10-ல் வாக்குப் பதிவு நடைபெறுகிறது.
70 சட்டசபை தொகுதிகள்
ஒடிஷா, மகாராஷ்டிர ஆகிய மாநிலங்களில் உள்ள 71 சட்டசபை தொகுதிகளுக்கும் 10ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது.
பிரசாரம் ஓய்வு
நாளை மறுநாள் வாக்குப் பதிவு நடைபெறும் அனைத்து மாநிலங்களிலும் இன்று மாலை 5 மணியுடன் தேர்தல் பிரசாரம் முடிவுக்கு வந்தது.