சீனாவின் ஜிடிபி வளர்ச்சியை இந்தியா தாண்டுமா, இல்லையா? – நிபுணர்களின் அலசல்
டெல்லி: 2016 ஆம் ஆண்டு வாக்கில் சீனாவின் ஜிடிபி வளர்ச்சியை இந்தியா தாண்டி விடும் என்று கணிக்கப்பட்டுள்ளது. பொருளாதார நிபுணர்களும் அவ்வாறே கூறி வருகின்றனர்.
ஆனால் உண்மை நிலவரத்தைப் பார்த்தால் 2032 ஆம் ஆண்டுக்கு முன்பு அது சாத்தியமல்ல என்று ஐஎம்எப் எனப்படும் சர்வதேச நிதியத்தின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன என்று இந்தியாஸ்பெண்ட் இணையதள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீனாவும், இந்தியாவும் பொருளாதார வளர்ச்சியில் போட்டி போட்டுக் கொண்டு வேகமாக முன்னேறி வருகின்றன. அதில் சீனா அசுர பலத்துடன் நம்மை விட மேலான நிலையில் உள்ளது. ஆனால் இந்த வளர்ச்சியை நாம் 2016ம் ஆண்டில் தாண்டி விடுவோம் என்று நமது பொருளாதார நிபுணர்கள் கூறி வருகின்றனர்.
ஆனால் சர்வதேச நிதியத்தின் புள்ளி விவர அறிக்கையைப் பார்த்தால் இப்போதைக்கு நாம் சீனாவின் வளர்ச்சிக்கு அருகில் கூட போக முடியாது என்றே தோன்றுகிறது.
இரு நாடுகளுக்கும் இடையிலான வித்தியாசம் மிகப் பெரிதாக உள்ளது. இதற்கு முக்கியக் காரணம் என்னவென்றால் நமக்கு முன்பே சீனா பொருளாதார சீர்திருத்தம், தாராளமயமாக்கலுக்கு மாறியதே. அதாவது 70களிலேயே டெங் ஜியோபிங் தலைமையிலான சீன அரசு தாராளமயமாக்கலுக்கு மாறி விட்டது. மாறாக இந்தியா, 1991ம் ஆண்டுதான் பி.வி. நரசிம்மராவ் தலைமையிலான அரசின் ஆட்சியின்போதுதான் தாராளமயமாக்கலுக்கு மாறியது.
80களின் இறுதியில், சீனாவை விட இந்தியா பெரிய பொருளாதார சக்தியாக இருந்தது. ஆனால் 1986ம் ஆண்டு சீனா நம்மை முந்தியது. அப்போது அதன் ஜிடிபியானது 710 பில்லியன் டாலராக இருந்தது. இந்தியாவின் ஜிடிபி 698 பில்லின் டாலராக இருந்தது. அதன் பின்னர் சீனாவின் பொருளாதார வளர்ச்சி தொடர்ந்து உயர்ந்தவண்ணமே இருந்தது. இந்தியாவும் சீரான வளர்ச்சிப் பாதையில்தான் இருந்தது. ஆனால் நம்மை விட வேகமாக வளர்ந்து விட்டது சீனா.
தற்போதைய வேகத்தில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி இருந்தாலும் கூட 2032 ஆம் ஆண்டுக்கு முன்பாக சீனாவை நாம் முந்தக் கூடிய வாய்ப்பில்லை என்கிறது சர்வதேச நிதியத்தின் அறிக்கை.
ஒரு வேளை 2016 ஆம் ஆண்டிலேயே நாம் அசுரத்தனமாக வளர்ந்து சீனாவை முந்தினால் நிச்சயம் மகிழ்ச்சிதான்.
-
இந்தியாவை தாக்க பெரிய சதி.. பாகிஸ்தான் உளவு அமைப்புடன் தொடர்பில் இருந்த 9 பேர் கைது.. பகீர் பின்னணி -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ












Click it and Unblock the Notifications