சீனாவின் ஜிடிபி வளர்ச்சியை இந்தியா தாண்டுமா, இல்லையா? – நிபுணர்களின் அலசல்
டெல்லி: 2016 ஆம் ஆண்டு வாக்கில் சீனாவின் ஜிடிபி வளர்ச்சியை இந்தியா தாண்டி விடும் என்று கணிக்கப்பட்டுள்ளது. பொருளாதார நிபுணர்களும் அவ்வாறே கூறி வருகின்றனர்.
ஆனால் உண்மை நிலவரத்தைப் பார்த்தால் 2032 ஆம் ஆண்டுக்கு முன்பு அது சாத்தியமல்ல என்று ஐஎம்எப் எனப்படும் சர்வதேச நிதியத்தின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன என்று இந்தியாஸ்பெண்ட் இணையதள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீனாவும், இந்தியாவும் பொருளாதார வளர்ச்சியில் போட்டி போட்டுக் கொண்டு வேகமாக முன்னேறி வருகின்றன. அதில் சீனா அசுர பலத்துடன் நம்மை விட மேலான நிலையில் உள்ளது. ஆனால் இந்த வளர்ச்சியை நாம் 2016ம் ஆண்டில் தாண்டி விடுவோம் என்று நமது பொருளாதார நிபுணர்கள் கூறி வருகின்றனர்.
ஆனால் சர்வதேச நிதியத்தின் புள்ளி விவர அறிக்கையைப் பார்த்தால் இப்போதைக்கு நாம் சீனாவின் வளர்ச்சிக்கு அருகில் கூட போக முடியாது என்றே தோன்றுகிறது.
இரு நாடுகளுக்கும் இடையிலான வித்தியாசம் மிகப் பெரிதாக உள்ளது. இதற்கு முக்கியக் காரணம் என்னவென்றால் நமக்கு முன்பே சீனா பொருளாதார சீர்திருத்தம், தாராளமயமாக்கலுக்கு மாறியதே. அதாவது 70களிலேயே டெங் ஜியோபிங் தலைமையிலான சீன அரசு தாராளமயமாக்கலுக்கு மாறி விட்டது. மாறாக இந்தியா, 1991ம் ஆண்டுதான் பி.வி. நரசிம்மராவ் தலைமையிலான அரசின் ஆட்சியின்போதுதான் தாராளமயமாக்கலுக்கு மாறியது.
80களின் இறுதியில், சீனாவை விட இந்தியா பெரிய பொருளாதார சக்தியாக இருந்தது. ஆனால் 1986ம் ஆண்டு சீனா நம்மை முந்தியது. அப்போது அதன் ஜிடிபியானது 710 பில்லியன் டாலராக இருந்தது. இந்தியாவின் ஜிடிபி 698 பில்லின் டாலராக இருந்தது. அதன் பின்னர் சீனாவின் பொருளாதார வளர்ச்சி தொடர்ந்து உயர்ந்தவண்ணமே இருந்தது. இந்தியாவும் சீரான வளர்ச்சிப் பாதையில்தான் இருந்தது. ஆனால் நம்மை விட வேகமாக வளர்ந்து விட்டது சீனா.
தற்போதைய வேகத்தில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி இருந்தாலும் கூட 2032 ஆம் ஆண்டுக்கு முன்பாக சீனாவை நாம் முந்தக் கூடிய வாய்ப்பில்லை என்கிறது சர்வதேச நிதியத்தின் அறிக்கை.
ஒரு வேளை 2016 ஆம் ஆண்டிலேயே நாம் அசுரத்தனமாக வளர்ந்து சீனாவை முந்தினால் நிச்சயம் மகிழ்ச்சிதான்.
-
மீண்டும் பிரம்மாஸ்திரத்தை கையில் எடுக்கும் மத்திய அரசு.. ரூ.2.5 லட்சம் கோடி மெகா திட்டம்! -
20,000 பாடல்கள் பாடிய சுஜாதாவிற்கு இப்படி ஒரு பிரச்சனையா? 5 வருடங்களாக பாடாத காரணம்! உருக்கம் -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
எங்கிட்ட எப்படி ஆதரவு கேட்கலாம்? கவுண்டம்பாளையம் அதிமுக வேட்பாளரிடம் சொன்ன வார்த்தை.. பின்னணி -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட்












Click it and Unblock the Notifications