குஜராத் கலவரம்: மோடி-வாஜ்பாய் கடித விவரங்களை வெளியிட பிரதமர் அலுவலகம் மறுப்பு

குஜராத்தில் 2002-ஆம் ஆண்டில் நடைபெற்ற கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தில் 50-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். அதையடுத்து நிகழ்ந்த கலவரத்தில் சுமார் 2,000 பேர் கொல்லப்பட்டனர். அதை மறுத்த மோடி, "நான் ராஜ தர்மத்தைக் கடைபிடித்து வருவதாகவே வாஜ்பாய் குறிப்பிட்டார் என்று கூறியிருந்தார்.
அந்த சமயத்தில், ராஜ தர்மத்தைக் கடைபிடிக்கும்படியும், ஜாதி, மதப் பாகுபாடின்றி நல்லாட்சி நடத்தும்படியும் மோடியிடம் அப்போதைய பிரதமர் வாஜ்பாய் கூறியதாக செய்திகள் வந்தன.
இந்நிலையில், கடந்த மாதம் 21-ஆம் தேதி ஜெய்ப்பூரில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பிரதமர் மன்மோகன் சிங் பேசுகையில், முன்னாள் பிரதமரிடம் ஒரு பாஜக முதல்வர் ஏராளமான குற்றச்சாட்டுகளுக்கு உள்ளானார். ராஜ தர்மத்தைக் கடைபிடிக்கும்படி ஒரு முறை அந்த முதல்வர் அறிவுறுத்தப்பட்டார் என்று மோடியை மறைமுகமாக விமர்சித்தார்.
தற்போது வாஜ்பாய்-மோடி இடையேயான அந்த உரையாடல்தான் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. குஜராத் கலவரத்திற்கு பின்னர், அதாவது 2002-ஆம் ஆண்டு பிப்ரவரி 27-ஆம் தேதி முதல் ஏப்ரல் 30-ஆம் தேதிவரை மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு நிலை பற்றி பிரதமர் அலுவலகத்துக்கும் குஜராத் அரசுக்கும் இடையேயான அனைத்து தகவல் பரிமாற்றங்களின் நகல்களையும் வழங்குமாறு தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் ஒரு விண்ணப்பதாரர் கேட்டிருந்தார்.
இதற்கு பிரதமர் அலுவலகம் பதிலளிக்கையில், தகவல் உரிமை சட்டப்பிரிவு 8(1)(எச்)-இன்படி, ஒரு வழக்கு விசாரணையில் இருக்கும்போதோ அல்லது வழக்கு நடைபெற்றுக் கொண்டிருக்கும்போதோ, அது குறித்த தகவலை வெளியிட தடை செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளது.
8(1)(எச்) என்ற பிரிவின் கீழ் மனுவை நிராகரித்தாலும், மனுதாரர் கோரும் தகவல்கள் எவ்வாறு அந்த சட்டப்பிரிவின் கீழ் அடங்கும் என்பதை தெளிவாகக் கூறவேண்டும் என்று டெல்லி உயர் நீதிமன்றம் ஏற்கெனவே உத்தரவிட்டுள்ள போதிலும், மேற்கண்ட மனுவுக்கான பதிலில் அவ்வாறு பிரதமர் அலுவலகம் விளக்கம் தரவில்லை.
-
அப்போவே வார்னிங் கொடுத்தேன்.. அமெரிக்காதான் கேட்கல! போட்டு உடைத்த கத்தாரின் எரிசக்தித்துறை அமைச்சர் -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
ரேஷன் அட்டைதாரர்களுக்கு மெகா ஆஃபர்: ஒரே மாதத்தில் 3 மாத ரேஷன்! மத்திய அரசின் சர்ப்ரைஸ் பின்னணி என்ன -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன்












Click it and Unblock the Notifications