தேசிய பாதுகாப்பு ஆலோசகர்கள் சந்திப்பை ரத்து செய்தது பாக்: துரதிரஷ்டவசமான முடிவு - இந்தியா
லக்னோ: தேசிய பாதுகாப்பு ஆலோசகர்கள் சந்திப்பை பாகிஸ்தான் அரசு ரத்து செய்து விட்டது. இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், இது துரதிர்ஷ்டவசமானது. நாங்கள் பேச்சுவார்த்தையை விரும்பவே செய்தோம். ஆனால் பாகிஸ்தான்தான் ரத்து செய்து விட்டது என்று கூறியுள்ளார்.
எதிர்காலத்தில் இரு நாடுகளுக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகள் நடைபெறுவதும், நடைபெறாமல் போவதும், பாகிஸ்தானின் செயல்பாடுகளைப் பொறுத்தது என்றும் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்.
இந்தியா எப்போதுமே பாகிஸ்தானுடன் நல்லுறவையே விரும்புகிறது. பேச்சுவார்த்தையை அது வெறுத்ததில்லை என்றும் ராஜ்நாத் சிங் விளக்கியுள்ளார்.

தேசிய பாதுகாப்பு ஆலோசகர்கள் கூட்டம்
இந்திய பாதுகாப்பு ஆலோசகர் அஜீத் தோவல் மற்றும் பாகிஸ்தான் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சர்தாஜ் அஜீஸ் ஆகியோர் சந்தித்துப் பேசுவது என திட்டமிடப்பட்டிருந்தது. நாளை இந்த சந்திப்பு நடைபெருவதாக இருந்தது.

பாகிஸ்தான் ராணுவத்தின் அத்துமீறல்
இந்த நிலையில்தான் எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறல்களை அதிகரித்தது. தொடர்ந்து இந்திய நிலைகளைக் குறி வைத்து தாக்கி வந்தது. இதனால் பேச்சுவார்த்தை நடைபெறுமா என்பது கேள்விக்குறியானது.

முந்திக் கொண்ட பாகிஸ்தான்
மத்திய அரசு பேச்சுவார்த்தையை ரத்து செய்யலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் நல்ல பிள்ளை மாதிரி முந்திக் கொண்ட பாகிஸ்தான் பேச்சுவார்த்தை ரத்து செய்யப்படுவதாக அறிவித்துள்ளது.

நாங்கள் பொறுப்பல்ல.. ராஜ்நாத் சிங்
இதுகுறித்து லக்னோவில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ராஜ்நாத் சிங் செய்தியாளர்களிடம் பேசுகையில், இது துரதிர்ஷ்டவசமானது. இதற்கு நாங்கள் பொறுப்பல்ல. பாகிஸ்தான்தான் ரத்து செய்துள்ளது. இந்தியா அல்ல.

நல்லுறவையே விரும்புகிறோம்
இந்தியா எப்போதுமே நல்லுறவையே விரும்புகிறது. பேச்சுவார்த்தையை அது வெறுத்ததில்லை. ஆனால் பாகிஸ்தான் தனது செயல்பாடுகளில் அக்கறை காட்டுவதில்லை.

பாகிஸ்தான் தடம் மாறக் கூடாது
ஜூலை மாதம் இரு நாட்டு பிரதமர்களிடையே நடந்த சந்திப்பின்போது அளிக்கப்பட்ட உறுதி்மொழிகளைக் காப்பாற்றும் வகையில் பாகிஸ்தான் செயல்பட வேண்டும். அதிலிருந்து தடம் புரளக் கூடாது என்றார் அவர்.
-
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக












Click it and Unblock the Notifications