பீகாரில் கொடுமை: ராணுவ பணிக்கான தேர்வை ஜட்டியோடு எழுதிய 1,100 பேர்
பாட்னா: பீகாரில் ராணுவத்தில் கிளார்க் பணிக்கான எழுத்து தேர்வுக்கு வந்தவர்களை ஆடைகளை அவிழ்க்குமாறு கூறி உள்ளாடையுடன் தேர்வு எழுத வைத்துள்ளது தெரிய வந்துள்ளது.
பீகார் மாநிலத்தில் உள்ள முசாபர்பூரில் ராணுவத்தில் கிளார்க் பணிக்கான எழுத்து தேர்வு நடைபெற்றது. 1,100 ஆண்கள் தேர்வு மையத்திற்கு காலையில் வந்தனர். தேர்வு மையத்தில் இருந்த அதிகாரிகள் 1,100 பேரையும் ஆடையை அவிழ்த்துவிட்டு உள்ளாடையுடன் தரையில் அமர்ந்து தேர்வு எழுத வைத்துள்ளனர்.
Muzaffarpur (Bihar) (28/02/2016): Candidates asked to appear for Army recruitment exam in their underwear. pic.twitter.com/GWbTNpiuhK
— ANI (@ANI_news) February 29, 2016
இது குறித்து ராணுவம் தரப்பில் கூறப்பட்டுள்ளதாவது,
தேர்வு எழுத 1,100 பேர் வந்திருந்தனர். அவர்கள் பிட் ஏதாவது வைத்திருந்தார்களா என்பதை சோதனை செய்ய நேரம் ஆகும். நேரத்தை மிச்சப்படுத்தவே அவர்களை ஆடையின்றி தேர்வு எழுதுமாறு கூறப்பட்டது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்வில் ஏமாற்று வேலை செய்வதற்கு பெயர் போன பீகாரில் இது தான் சரியான வழி என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆடையில்லாமல் தரையில் அமர்ந்து தேர்வு எழுதியது மிகவும் அசவுகரியமாக இருந்ததாக தேர்வு எழுதியவர்கள் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications