சூரத் டூ மும்பை பறந்து வந்த இதயம்.. 'கிரீன் காரிடார்' மூலம் புது வாழ்வு பெற்ற பெங்களூர் தொழிலதிபர்
மும்பை: சூரத்தில் கார் விபத்தில் மூளைச்சாவு அடைந்த இளைஞரின் இதயம், மும்பைக்கு விமானத்தில் கொண்டு வரப்பட்டு 52 வயது நோயாளிக்கு பொருத்தப்பட்டது. இதேபோல் பெங்களூரில் விபத்தில் சிக்கி மூளைச்சாவு அடைந்த மாணவரின் இதயம் இளைஞர் ஒருவருக்கு பொருத்தப்பட்டுள்ளது.
குஜராத் மாநிலம் சூரத்தைச் சேர்ந்தவர் ஜகதீஷ் பட்டேல் (43). கார் விபத்தில் சிக்கிய இவர் மூளைச் சாவு அடைந்ததால், அவரது உடல் உறுப்புகளைத் தானம் செய்ய உறவினர்கள் முடிவெடுத்தனர்.

அதனைத் தொடர்ந்து மகாராஷ்டிரா மாநிலம் முலுண்ட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அன்வர் கான் என்ற 52 வயது நோயாளிக்கு இதயம் பாதிக்கப்பட்டிருப்பதும், மாற்று இதயத்திற்காக அவர் காத்திருப்பதும் தெரிய வந்தது.
அதனைத் தொடர்ந்து பட்டேலின் இதயத்தை அன்வருக்கு பொருத்த மருத்துவர்கள் முடிவெடுத்தனர். பட்டேலின் இருதயம் வாகனம் மூலம் முலுண்ட் கொண்டு செல்லப்பட்டு, அன்வருக்கு பொருத்தப்பட்டது.
இதற்காக, போலீசாரின் உதவியுடன் முலுண்ட்-சூரத் இடையிலான 269 கி.மீ தூரத்தை இதயம் கொண்டு செல்லப்பட்ட வாகனம் 1 மணி 32 நிமிடத்தில் கடந்து சாதனை செய்தது.
இதயம் மட்டுமின்றி பட்டேலின் சிறுநீரகங்களும்,நுரையீரலும் ராஜஸ்தானை சேர்ந்த 3 பேருக்கு பொருத்தப்பட்டன.
இதேபோல், பெங்களூரில் தனியார் கல்லூரில் பியுசி படித்து வந்த கிரண்குமார் என்ற 17 வயது மாணவர் கடந்த 17ம் தேதி பைக் விபத்தில் சிக்கி மூளைச்சாவு அடைந்தார். கிரணின் உடல் உறுப்புகளைத் தானம் செய்ய அவரது குடும்பத்தினர் முன்வந்தனர்.
அதனைத் தொடர்ந்து, பெங்களூரு ஓசூர் சாலையில் இருக்கும் நாராயணா இருதாலயா மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த டெல்லியைச் சேர்ந்த ரிஷி சிவகொடி(35) என்ற தொழில் அதிபருக்கு கிரணின் இதயம் பொருத்தப்பட்டது.
இதயம் எடுத்துச் செல்லப்பட்ட சாலைகளில் "கிரீன் காரிடார்" அமைத்து பூஜ்ய சிக்னல் அமைத்து போலீசார் உதவினர். இதனால், கிரணின் இதயம் 30 கிமீ சாலையை 32 நிமிடங்களில் நாராயணா இருதாலயா மருத்துவமனைக்கு சென்றடைந்தது குறிப்பிடத்தக்கது.
-
"நாய்கள் குரைப்பதால் தூங்க முடியவில்லை".. புகாரளித்த பெண்.. போலீஸ் செய்த வேலையை பாருங்க -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி












Click it and Unblock the Notifications