முடிவுக்கு வந்தது சுப்ரீம்கோர்ட் நீதிபதிகள் பிரச்சனை: வழக்குகளை பிரித்து தர தலைமை நீதிபதி ஒப்புதல்!
சுழற்சி முறையில் வழக்குகள் பிரித்து ஒதுக்கப்படும் என தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தெரிவித்துள்ளார்.
டெல்லி: சுழற்சி முறையில் வழக்குகள் பிரித்து ஒதுக்கப்படும் என சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தெரிவித்துள்ளார். இதனால் சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் பிரச்சனை முடிவுக்கு வந்துள்ளது.
உச்சநீதிமன்ற மூத்த நீதிபதிகள் செல்லமேஸ்வர், குரியன் ஜோசப், மதன் பி லோகூர், ரஞ்சன் கோகாய் ஆகியோர் கூட்டாக கடந்த மாதம் 12 ஆம் தேதி டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்தனர்.
அப்போது கடந்த சில மாதங்களாக உச்சநீதிமன்றத்தில் விரும்பத்தகாத நிகழ்வுகள் நடந்து வருகின்றன என்று அவர்கள் குற்றம்சாட்டினர். உச்சநீதிமன்றத்தை பாதுகாக்க தாங்கள் எடுத்த நடவடிக்கைகள் தோல்வியில் முடிந்தது என்றும் அவர்கள் கூறினர்.

நீதிபதிகள் குற்றச்சாட்டு
இதே நிலை நீடித்தால் இந்தியாவில் ஜனநாயகம் நிலைக்காது என்றும் தெரிவித்தனர். மேலும் தலைமை நீதிபதியை பதவி நீக்கம் செய்வது குறித்து நாடு சிந்திக்க வேண்டும் என்றும் அவர்கள் குற்றம்சாட்டியிருந்தனர்.

வழக்குகளை வழங்குவதில்லை
மற்ற நீதிபதிகளுக்கு தலைமை நீதிபதி வழக்குகளை பிரித்துக் கொடுப்பதில்லை என்றும் அவர்கள் குற்றம்சாட்டினர். தலைமை நீதிபதி குறித்து மற்ற நீதிபதிகள் குற்றம்சாட்டியது நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

தீபக் மிஸ்ராவுக்கு கடிதம்
நீதிபதிகளின் பிரச்சனையில் விலகியே நிற்கபோவதாக மத்திய அரசு அறிவித்தது. இந்நிலையில் முக்கியத்துவம் வாய்ந்த வழக்குகளை மூத்த நீதிபதிகளுக்கு மட்டுமே ஒதுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி ஓய்வுபெற்ற 4 நீதிபதிகள், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவுக்கு கடந்த 14ஆம் தேதி கடிதம் எழுதினர்.

தலைமை நீதிபதி ஒப்புதல்
இந்நிலையில் வழக்குகள் சுழற்சி முறையில் பிரித்து ஒதுக்கப்படும் என சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தெரிவித்துள்ளார். இதன்மூலம் நீதிபதிகள் பிரச்சனை தற்போது முடிவுக்கு வந்துள்ளது.
-
ஓபிசி கிரிமிலேயர் வருமான வரம்பு தொடர்பாக உச்ச நீதிமன்றம் தீர்ப்பு.. முதல்வர் ஸ்டாலின் வரவேற்பு -
தமிழ்நாடு புதிய டிஜிபி நியமனம் எப்போது? மார்ச் 20-ல் யுபிஎஸ்சி கூட்டம் - உச்ச நீதிமன்றத்தில் தகவல்! -
அமெரிக்கா இனி பிக்பாஸ் இல்லை.. நீங்க நம்பலைனாலும் அதான் நெசம்.. ஐக்கிய அரபு சகாப்தமும் வீழ்ந்தது! -
கள்ளக்குறிச்சியில் சினிமாவை மிஞ்சும் சம்பவம்.. காதல் கணவனுக்கு உயிருடன் கொள்ளி வைத்த அம்மு -
எங்களை எப்படியாவது காப்பாத்துங்க.. அமெரிக்கா - இந்தியாவிடம் கெஞ்சும் வங்கதேசம்.. ரஷ்யா உதவுமா? -
பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாமா? 98 தவெக மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு.. விஜய் எடுக்கப்போகும் முடிவு! -
சீனா அரண்டு நிற்குது.. மொத்த டிராகனுக்கும் சவால் விடும் தமிழ்நாட்டின் குட்டி சிட்டி.. ரியல் இன்ஜின்! -
வந்தாச்சு நீண்ட காலம் காத்திருந்த நல்ல செய்தி.. H-1b விசா கட்டுப்பாடுகள் நீக்கம்? புதிய மசோதா தாக்கல் -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
இந்திய வரலாற்றில் முதல்முறை.. தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் நோட்டீஸ்! -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட்












Click it and Unblock the Notifications