Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஜாதிவாரி கணக்கெடுப்பு என்பது என்ன? முக்கியம் ஏன்? முயற்சிகள் தோல்வியில் முடிந்தன ஏன்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஜாதிவாரி மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நடத்தப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளதைத் தொடர்ந்து பல்வேறு விவாதங்கள் களைகட்டி உள்ளன. ஜாதிவாரி கணக்கெடுப்புக்கு நிதியும் ஒதுக்காமல் காலமும் நிர்ணயிக்காமல் மத்திய அரசு வெளியிட்டுள்ள இந்த அறிவிப்பு பல்வேறு சந்தேகங்களை எழுப்புவதாகவும் அரசியல் கட்சித் தலைவர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

ஜாதிவாரி கணக்கெடுப்பு தொடர்பாக கடந்த ஆண்டு ஆங்கில நாளேட்டில் தமிழக முன்னாள் ஐஏஎஸ் அதிகாரியும் தற்போதைய தமிழ்நாடு அரசின், மத்திய- மாநில உறவுகளுக்கான கமிட்டியின் உறுப்பினருமான அசோக் வர்தன் ஷெட்டி கடந்த ஆண்டு ஆங்கில நாளேட்டில் எழுதிய கட்டுரையில் இடம் பெற்ற தகவல்கள்:

Caste

இந்­திய மக்­கள் தொகைக் கணக்­கெ­டுப்­பில் சாதி­யைக் (ஜாதியை) கணக்­கி­டு­வது நான்கு கார­ணங்­க­ளுக்­காக முக்­கி­ய­மா­னது :-

1) இது ஒரு சமூக கட்­டா­யம். இந்­தி­யா­வில் சாதி என்­பது ஒரு அடிப்­படை சமூ­கக் கட்­ட­மைப்­பா­கத் தொடர்­கி­றது. 2011--12ல் மேற்­கொள்­ளப்­பட்ட ஒரு கணக்­கெ­டுப்­பின்­படி, இந்­திய திரு­ம­ணங் க­ளில் 5 சத­வீ­தம் மட்­டுமே சாதி­க­ளுக்கு இடை­யே­யான திரு­ம­ணங்­கள். சாதிய குடும்­பப்­பெ­யர்­கள் மற்­றும் சாதி அடை­யா­ளங்­களை உட­லில் பயன்­ப­டுத்­து­வது இன்­னும் பர­வ­லாக உள்­ளது. பெரும்­பா­லான கிரா­மங்­க­ளி­லும் பல நக­ரங்­க­ளி­லும் சாதி­யின் அடிப்­ப­டை­யில் குடி­யி­ருப்­புப் பிரி­வினை நீடிக்­கி­றது. தேர்­த­லுக்­கான வேட்­பா­ளர்­க­ளும், மந்­தி­ரி­ச­பைக்­கான அமைச்­சர்­க­ளும் முக்­கி­ய­மாக சாதி­யின் அடிப்­ப­டை­யில் தேர்ந்­தெ­டுக்­கப்­ப­டு­கி­றார்­கள். சாதியை ஒழிப்­ப­தில் அரசு தீவி­ரம் காட்­டி­னால், இந்­தப் பிரச்­னை­க­ளில் கவ­னம் செலுத்த வேண்­டும்; மக்­கள் தொகைக் கணக்­கெ­டுப்­பில் சாதி­யைக் கணக்­கி­டா­மல் இருப்­பது தீர்­வா­காது.

2) இது ஒரு சட்­ட­பூர்­வ­மான கட்­டா­யம். தேர்­தல் தொகு­தி­கள், கல்வி மற்­றும் பொது வேலை­வாய்ப்பு ஆகி­ய­வற்­றில் இட­ஒ­துக்­கீ­டு­களை உள்­ள­டக்­கிய சமூக நீதிக்­கான அர­சி­ய­ல­மைப்பு- கட்­டா­யக் கொள்­கை­கள் விரி­வான சாதி வாரி­யான தரவு இல்­லா­மல் திறம்­பட தொடர முடி­யாது. அர­சி­ய­ல­மைப்­புச் சட்­டம் சாதி என்­ப­தற்­குப் பதி­லாக வர்க்­கம் என்ற வார்த்­தை­யைப் பயன்­ப­டுத்­தி­னா­லும், பிற்­ப­டுத்­தப்­பட்ட வகுப்­பி­னரை வரை­ய­றுப்­ப­தற்கு ஜாதியை 'தொடர்­பு­டைய அள­வு­கோல்', 'ஒரே அள­வு­கோல்' அல்­லது 'ஆதிக்க அள­வு­கோல்' என உச்ச நீதி­மன்­றத்­தின் பல்­வேறு தீர்ப்­பு­கள் கூறி, சாதி வாரி­யாக விரி­வான கோரிக்­கையை முன்­வைத்­துள்­ளன. இது இட ஒதுக்­கீடு கொள்­கை­களை நிலை­நி­றுத்­து­வ­தற்­கான தரவு.

3) இது ஒரு நிர்­வாக கட்­டா­யம். தகு­தி­யற்ற சாதி­களை தவ­றான முறை­யில் சேர்ப்­ப­தை­யும், தகு­தி­யுள்ள சாதி­களை தவ­றாக ஒதுக்­கு­வ­தை­யும் தவிர்க்­க­வும்/திருத்­த­வும், ஒதுக்­கப்­பட்ட பிரி­வில் உள்ள ஒரு சில ஆதிக்க சாதி­கள் பிற சாதி­களை ஒதுக்­கப்­ப­டு­வ­தைத் தவிர்க்­க­வும் விரி­வான சாதி வாரி­யான தரவு அவ­சி­யம். ஒதுக்­கப்­பட்ட பிரி­வி­னுள் உள்ள சாதி­களை துணைப்­பி­ரிவு செய்­வ­தற்­கும், கிரீ­மி­லே­ய­ருக்கு வரு­மா­னம்/செல்­வம் அள­வு­கோலை நிர்­ண­யம் செய்­வ­தற்­கும் இது தேவைப்­ப­டு­கி­றது.

4) இது ஒரு தார்­மீக கட்­டா­யம். விரி­வான ஜாதி வாரி­யான தரவு இல்­லா­தது, உயர் சாதி­யி­னர் மற்­றும் மேலா­திக்க இதர பிற்­ப­டுத்­தப்­பட்ட வகுப்­பி­னர் (OBC கள்) மத்­தி­யில் உள்ள உய­ர­டுக்­கி­ன­ருக்கு, நாட்­டின் சொத்­துக்­கள், வரு­மா­னங்­கள் மற்­றும் அதி­கா­ரப் பத­வி­க­ளில் விகி­தா­சா­ர­மற்ற பங்­கைப் பெற உத­வி­யது. இது பெரும்­பான்­மை­யி­ன­ராக உள்ள தாழ்த்­தப்­பட்ட சாதி­யி­ன­ருக்­குப் பாத­க­மாக அமைந்­தது.

ஆங்கிலேயர் ஆட்சியில் ஜாதிவாரி கணக்கெடுப்பு

பிரிட்­டிஷ் இந்­தி­யா­வில், 1881 முதல் 1931 வரை­யி­லான மக்­கள் தொகை கணக்­கெ­டுப்­பில் அனைத்து சாதி­யி­ன­ரும் கணக்­கி­டப்­பட்­ட­னர். 1951 ஆம் ஆண்டு சுதந்­தி­ரத்­திற்­குப் பிறகு நடத்­தப்­பட்ட முதல் மக்­கள் தொகைக் கணக்­கெ­டுப்­பில், சாதி­யைக் கணக்­கி­டக் கூடாது என்று இந்­திய அரசு உத்­த­ர­விட்­டது. இருப்­பி­னும், பட்­டி­யல் சாதி­யி­னர் (SC) மற்­றும் பழங்­கு­டி­யி­னர் (ST) ஆகி­ய­வற்­றுக்கு விதி­வி­லக்கு அளிக்­கப்­பட்­டது. 1951 முதல் ஒவ்­வொரு மக்­கள் தொகை கணக்­கெ­டுப்­பி­லும் அவர்­கள் கணக்­கி­டப்­ப­டு­கின்­ற­னர். 1961 ஆம் ஆண்­டில், இந்­திய அரசு மாநி­லங்­கள் விரும்­பி­னால் தங்­கள் சொந்த கணக்­கெ­டுப்­பு­களை நடத்­த­வும், மாநி­ல-­கு­றிப்­பிட்ட OBC பட்­டி­யல்­க­ளைத் தயா­ரிக்­க­வும் அறி­வு­றுத்­தி­யது. அந்த நேரத்­தில் மத்­திய அர­சி­லும் அதன் நிறு­வ­னங்­க­ளி­லும் OBC களுக்கு இட ஒதுக்­கீடு இல்லை.

மக்­கள் தொகை கணக்­கெ­டுப்­பில் ஏன் OBC கணக்­கி­டப்­பட வேண்­டும்?

எஸ்.சி. மற்­றும் எஸ்.டி.களைப் போலவே, ஓ.பி.சி.களுக்­கும் கல்வி (பிரிவு 15(4)) மற்­றும் பொது வேலை­வாய்ப்­பில் (பிரிவு 16(4)) இட­ஒ­துக்­கீட்டை அர­சி­ய­ல­மைப்பு அனு­ம­திக்­கி­றது. நாட்­டின் பல பகு­தி­க­ளில், ஓபி­சி­யி­னர் சுதந்­தி­ரத்­திற்கு முன்பே இட­ஒ­துக்­கீட்டை அனு­ப­வித்து வந்­த­னர். எனவே, 1951 ஆம் ஆண்டு மக்­கள் தொகைக் கணக்­கெ­டுப்­பில் ஓபி­சி­யும் கணக்­கி­டப்­பட்­டி­ருக்க வேண்­டும்.

மண்­டல் கமி­ஷன் பரிந்­து­ரை­களை அமல்­ப­டுத்­திய பிறகு, ஒன்­றிய அரசு மற்­றும் அதன் நிறு­வ­னங்­க­ளி­லும் ஓ.பி.சி.கள் இட­ஒ­துக்­கீட்டை அனு­ப­விக்­கின்­ற­னர். இந்­திரா சாவ்னி (Indra Sawhney) வழக்­கில் (1992), ஓபிசி பட்­டி­யல் (இது 1931 மக்­கள் தொகை கணக்­கெ­டுப்­பின் அடிப்­ப­டை­யில்) அவ்­வப்­போது திருத்­தப்­பட வேண்­டும் என்று உச்ச நீதி­மன்­றம் தீர்ப்­ப­ளித்­தது.

எஸ்.சி., எஸ்.டி. போன்று எம்.பி., எம்.எல்.ஏ.க் களுக்கு தேர்­தல் தொகு­தி­க­ளில் ஓ.பி.சி.களுக்கு இட­ஒ­துக்­கீடு இல்லை. ஆனால் 73வது மற்­றும் 74வது திருத்­தங்­க­ளுக்­குப் பிறகு (1993), எஸ்.சி. மற்­றும் எஸ்.டி.களுக்கு மட்­டு­மின்றி ஓ.பி.சி. களுக்­கும் பஞ்­சா­யத்து மற்­றும் நக­ராட்­சி­க­ளில் தேர்­தல் தொகு­தி­க­ளில் இட­ஒ­துக்­கீடு அளிக்க அர­சி­ய­ல­மைப்பு வழங்­கு­கி­றது (பிரிவு 243D(6) மற்­றும் 243T(6)). இதற்கு, சாதி வாரி­யாக, பகுதி வாரி­யாக ஓ.பி.சி.களின் மக்­கள் தொகை கணக்­கெ­டுப்­புத் தரவு அவ­சி­யம். எனவே, ஒன்­றிய அரசு குறைந்­த­பட்­சம் 2001 மக்­கள்­தொகை கணக்­கெ­டுப்­பில் ஓ.பி.சி.களை கணக்­கெ­டுத்­தி­ருக்க வேண்­டும். ஆனால் செய்­ய­வில்லை.

உத்­த­ரப் பிர­தே­சம், மத்­தி­யப் பிர­தே­சம், குஜ­ராத், மகா­ராஷ்­டிரா, கர்­நா­டகா, ஒடிசா, ஜார்­கண்ட் போன்ற மாநி­லங்­கள் உள்­ளாட்­சித் தேர்­த­லில் ஓ.பி.சி.யின­ருக்­கான இட­ஒ­துக்­கீட்டை அமல்­ப­டுத்த முயன்ற போதெல்­லாம், சாதி வாரி­யான தரவு இல்­லாத கார­ணத்­திற்­காக உயர்­நீ­தி­மன்­றங்­க­ளும் உச்ச நீதி­மன்­ற­மும் தடை விதித்­தன. நாட்­டின் ஒரு பிரிவு - நீதித்­துறை - இட­ஒ­துக்­கீட்­டைப் பரா­ம­ரிக்க சாதி வாரி­யான தர­வு­க­ளைக் கோரு­கி­றது, மற்­றொன்று - மத்­திய அரசு - அதே தர­வு­களை எண்­ணு­வ­தைத் தவிர்ப்­ப­தற்­கான கார­ணங்­க­ளைக் கண்­டு­பி­டிக்­கி­றது!

எவ்­வா­றா­யி­னும், OBCகள், SCக்கள் மற்­றும் STகள் தவிர பிற மக்­க­ளி­டையே (திறம்­பட, உயர்­சா­தி­யி­னர்) பொரு­ளா­தார ரீதி­யாக நலி­வ­டைந்த பிரி­வி­ன­ருக்கு (EWS) 10% இட­ஒ­துக்­கீடு எந்த அனு­ப­வ­பூர்­வ­மான தர­வு­க­ளும் இல்­லாத போதி­லும் 2022 இல் உச்ச நீதி­மன்­றத்­தால் உறு­தி­செய்­யப்­பட்­டது. EWS இட­ஒ­துக்­கீட்­டைக் கருத்­தில் கொண்டு, மக்­கள் தொகைக் கணக்­கெ­டுப்­பில் 1931 வரை இருந்­த­தைப் போலவே உயர்­சா­தி­யி­னர் உட்­பட அனைத்து சாதி­க­ளை­யும் இப்­போது கணக்­கிட வேண்­டும்.

மக்­கள்­தொகை கணக்­கெ­டுப்பு ஒரு மையப் பொரு­ளா­கும், ஆனா­லும், புள்­ளி­யி­யல் சேக­ரிப்­புச் சட்­டம், 2008, தேவை­யான தர­வு­க­ளைச் சேக­ரிக்க மாநி­லங்­க­ளுக்­கும் உள்­ளாட்சி அமைப்­பு­க­ளுக்­கும் அதி­கா­ரம் அளிக்­கி­றது. எனவே, கர்­நா­டகா (2015) மற்­றும் பீகார் (2023) போன்ற சாதி­வாரி கணக்­கெ­டுப்­பு­களை தனிப்­பட்ட மாநி­லங்­கள் எப்­போ­தும் நடத்­த­லாம். ஆனால் மக்­கள் தொகை கணக்­கெ­டுப்பு தரவு அதிக நம்­ப­கத்­தன்மை கொண்­டது மற்­றும் குறை­வான சர்ச்­சைக்­கு­ரி­யது. இந்­திய அரசு 1992 முதல் OBC மற்­றும் 2019 முதல் EWS இட ஒதுக்­கீட்டை செயல்­ப­டுத்தி வரு­கி­றது. எனவே, மக்­கள்­தொ­கைக் கணக்­கெ­டுப்­பில் சாதி­யைக் கணக்­கி­டு­வ­தில் அதன் தயக்­கம் சட்­ட­ரீ­தி­யாக தவ­றா­னது மற்­றும் நிர்­வாக ரீதி­யாக விவே­க­மற்­றது.

சாதி­வாரி கணக்­கெ­டுப்பு முயற்சி எப்­படி தோல்­வி­ய­டைந்­தது?

ஓ.பி.சி. தலை­வர்­க­ளின் கணி­ச­மான பரப்­பு­ரைக்­குப் பிறகு, 2010 இல், 2011 மக்­கள்­தொகை கணக்­கெ­டுப்­பின் ஒரு பகு­தி­யாக சாதி­யைக் கணக்­கிட வேண்­டும் என்று நாடா­ளு­மன்­றம் ஒரு­ம­ன­தாக ஒரு தீர்­மா­னத்தை (காங்­கி­ரஸ் மற்­றும் பி.ஜே.பி. இரண்­டும் சேர்த்து) நிறை­வேற்­றி­யது. 1931 ஆம் ஆண்டு மக்­கள்­தொகை கணக்­கெ­டுப்­பின்­படி, சாதி கடை­சி­யாக கணக்­கி­டப்­பட்­ட­போது, இந்­தி­யா­வில் தாழ்த்­தப்­பட்ட வகுப்­பி­னர்/தீண்­டத்­த­கா­த­வர்­கள் (அப்­போது அவர்­கள் அப்­படி அழைக்­கப்­பட்­ட­னர்) தவிர 4,147 சாதி­கள் இருந்­தன. துர­திர்ஷ்­ட­வ­ச­மாக, சமூ­கப் பொரு­ளா­தா­ரம் மற்­றும் சாதிக் கணக்­கெ­டுப்பு (SECC)-2011 மோச­மாக வடி­வ­மைக்­கப்­பட்டு செயல்­ப­டுத்­தப்­பட்­டது, 46 லட்­சம் சாதி­கள் என்ற கேலிக்­கு­ரிய எண்­ணிக்­கையை தூக்கி எறிந்து, முடி­வு­கள் வெளி­யி­டப்­ப­ட­வில்லை. ஒரு பொன்­னான வாய்ப்பு பறி­போ­னது.

SECC-2011 மக்­கள்­தொ­கைக் கணக்­கெ­டுப்­புச் சட்­டம், 1948-ன் கீழ் நடத்­தப்­ப­டா­த­தால், செய­லி­ழந்­தது. சாதியை ஒரு அள­வு­கோ­லாக சேர்க்க சட்­டம் திருத்­தப்­ப­ட­வில்லை. சமூ­க­வி­யல்/மானு­ட­வி­யல் ஆய்­வு­களை மேற்­கொள்­வ­தில் முன் அனு­ப­வம் இல்­லாத, ஊரக வளர்ச்சி மற்­றும் நகர்ப்­புற மேம்­பாட்டு அமைச்­ச­கங்­கள் மூலம் இது நடத்­தப்­பட்­டது. கூடு­த­லாக, கேள்­வித்­தாள் மோச­மாக வடி­வ­மைக்­கப்­பட்­டுள்­ளது மற்­றும் சாதி பற்­றிய திறந்த கேள்­வி­கள் கேட்­கப்­பட்­டன. உண்­மை­யான சாதி­கள், மாற்று சாதிப் பெயர்­கள், பெரிய சாதிக் குழுக்­கள், துணை சாதி­கள், குடும்­பப்­பெ­யர்­கள், குலப்­பெ­யர்­கள், கோத்­தி­ரங்­கள் போன்­ற­வற்­றைக் கணக்­கெ­டுப்­பா­ளர்­க­ளால் வேறு­ப­டுத்­திப் பார்க்க முடி­ய­வில்லை.

இதற்கு நேர்­மா­றாக, 2023 இல் நடத்­தப்­பட்ட சாதி­வாரி கணக்­கெ­டுப்பை பீகார் அர­சாங்­கம் மிக சிறப்­பாக செய்­தது. பீகா­ரில் குறிப்­பிட்ட 214 சாதிப் பெயர்­க­ளின் பட்­டி­யலை அது கணக்­கெ­டுப்­பா­ளர்­க­ளுக்கு வழங்­கி­யது, மேலும் 215வது பிரிவை "பிற சாதி­கள்" என்று பெய­ரிட்­டது. ஆங்­கி­லே­யர்­க­ளா­லும், பீகார் அர­சா­லும் சாதி­வா­ரிக் கணக்­கெ­டுப்பை வெற்­றி­க­ர­மாக நடத்­த­மு­டி­யும் போது, இந்­திய அர­சால் ஏன் அதைச் செய்ய முடி­யாது? (நன்றி முரசொலி 18.07.2024).

ஜாதிவாரி கணக்கெடுப்பு கடைசியாக நடத்தப்பட்டு முடிவுகள் வெளியானத எந்த ஆண்டு?

1931

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+