"அவங்க" சமைச்சது வேணாம்.. சாப்பிட மாட்டோம்" அடம்பிடித்த 5 பிராமணர்.. கொரோனாவிலும் கொடுமை!
தனிமைப்படுத்தப்பட்ட முகாமில் தலித் சமையலை சாப்பிட மறுத்துள்ளனர் 5 பிராமணர்கள்
ராஞ்சி: "அந்த எஸ்சி சமைச்சது எங்களுக்கு வேணாம்.. சாப்பிட மாட்டோம்" என்று 5 பிராமணர்கள் பிடிவாதம் பிடித்த சம்பவம் பகீரை கிளப்பி உள்ளது.
கொரோனா தாண்டவத்திலும் சாதி வெறி அதைவிட வெறிபிடித்து ஆடுவதை பார்க்க வருத்தமாக உள்ளது.. ஜார்க்கண்ட் மாநிலம் ஹசாரிபாக் மாவட்டத்தில் ஒரு சம்பவம் நடந்துள்ளது.
ஹசாரிபாக்கின் பிஷ்னுகார் என்ற தொகுதியில் ஒரு அரசு பள்ளியில் சிலரை தொற்று காரணமாக தனிமைப்படுத்தி வைத்திருந்தனர்.. அவர்களுக்கு தேவையான சிகிச்சையும் நடந்து வந்தது.

நோயாளிகள்
ஏராளமான மாநிலங்களை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட கொரோனா நோயாளிகள் அங்கு சிகிச்சைக்காக தங்க வைக்கப்பட்டுள்ளனர். இதில், 5 பிராமணர்கள் தங்களுக்கு தரும் சாப்பாட்டை சாப்பிட மறுத்துள்ளனர்.. இதற்கு காரணம், அதை சமைத்தது எஸ்சி இனத்தை சேர்ந்த ஒரு சமையல்காரர் என்கிறார்கள்..

கிராம தலைவர்
தனிமைப்படுத்தல் மையத்தில் நடந்த இந்த சம்பவம் உள்ளூர் கிராம தலைவருக்கு தெரிவிக்கப்பட்டது.. இதையடுத்து, அந்த 5 பேருக்கும், மாவட்ட அதிகாரிகளால் ரேஷன் கிட்-கள் வழங்கப்பட்டன... மேலும் அந்த 5 பேருக்காக மட்டும், தனியாக சமைக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டது.

5 பிராமணர்கள்
இந்த தகவலை ஹராசிபாக் துணை ஆணையர் புவனேஷ் பிரதாப் சிங் உறுதிப்படுத்தியுள்ளார்... ஆனால் இதை பற்றி அவர் சொல்லும்போது, இந்த 5 பிராமணர்களும் இப்படி ஒரு பிரச்சினையை எழுப்பியிருக்கக் கூடாது என்று வேதனை தெரிவித்தார்.. வைரஸ் பரவல் அதிகரித்து வரும்நிலையில், மத, சாதி உறவுகளுக்கு அவர்கள் மதிப்பளித்திருக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

சமையல்
தங்களுக்கு சமைப்பதற்காகவே தனியாக ஒருவரை நியமிக்க வேண்டும் என்று தனிமைப்படுத்தல் மையத்தில் இருந்தவர்கள் கேட்டு கொண்டதையடுத்து, அவர்கள் வேறு இடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.. இவர்கள் தங்கியிருந்த இந்த பார்வார் இட்கா பள்ளியில் புலம்பெயர்ந்தவர்கள் தங்க வைக்க ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. கொரோனா நோய் பாதிப்பு காரணமாக தனிமைப்படுத்தப் பட்டவர்கள் வெளியேற்றப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் இதற்கு விளக்கம் அளித்துள்ளார்.

தீண்டாமை
சாதி பாகுபாட்டால் நிறைய இடங்களில் இதுபோன்ற சம்பவங்கள் நடந்து வருகிறது.. தலித் சமைத்துவிட்ட காரணத்தினாலேயே பலர் சாப்பிட மறுத்து வருகிறார்கள்.. தலித் குடிக்க தண்ணீர் தந்தாலும் அதனையும் குடிக்க மறுக்கும் அவலமும் நடக்கிறது.. கொரானா வந்தாலும் சரி, கொத்து கொத்தாக செத்தாலும் சரி, இந்த தீண்டாமை என்றுதான் ஒழிந்து தொலைந்து போகுமோ தெரியவில்லை!
-
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை! -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications