காவிரி வழக்கில் எழுத்துப்பூர்வ பதில் தர மத்திய அரசுக்கு புதன் வரை சுப்ரீம் கோர்ட் அவகாசம்
டெல்லி: காவிரி நடுவர் மன்றத் தீர்ப்புக்கு எதிரான வழக்கில் எழுத்துப்பூர்வ பதிலை மத்திய அரசு தாக்கல் செய்ய வரும் புதன்கிழமை வரை உச்சநீதிமன்றம் அவகாசம் அளித்துள்ளது.
காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பை எதிர்த்து தமிழகம், கர்நாடகா, கேரளா தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுக்களை விசாரணைக்கு ஏற்கலாமா? என்பது குறித்த தீர்ப்ப தேதி குறிப்பிடாமல் உச்சநீதிமன்றம் கடந்த வாரம் ஒத்தி வைத்தது. அப்போது அனைத்து தரப்பும் எழுத்துப்பூர்வமாக தங்களது தரப்பு வாதங்களை இன்றைக்குள் தாக்கல் செய்யவும் உத்தரவிட்டிருந்தது.

மேலும் தமிழகத்துக்கு காவிரியில் இருந்து மறு உத்தரவு வரும் வரை 2,000 கன அடிநீரை திறந்துவிட வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இதனிடையே மத்திய அரசு தம்முடைய எழுத்துப்பூர்வமான வாதங்களை தாக்கல் செய்ய புதன்கிழமை வரை இன்று கால அவகாசம் வழங்கியுள்ளது உச்சநீதிமன்றம்.
2007-ம் ஆண்டு காவிரி நடுவர் மன்றம் இறுதித் தீர்ப்பை வழங்கியது. அதன்படி தமிழகத்துக்கு 419 டிஎம்சி நீரை கர்நாடகா திறந்துவிட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications