காவிரி வழக்கை நடுவர் மன்றத்துக்கு திருப்பி அனுப்பமாட்டோம்.. சுப்ரீம் கோர்ட் உறுதி
காவிரி வழக்கை நடுவர் மன்றத்திற்கு திருப்பி அனுப்ப மாட்டோம் என்று சுப்ரீம் கோர்ட் உறுதி அளித்துள்ளது. இந்த வழக்கை அடுத்த மாதம் 7ம் தேதி முதல் தொடர்ந்து நடத்தப்படும் என்றும் சுப்ரீம் கோர்ட் கூறியுள்ளது
டெல்லி: காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பான வழக்கு அடுத்த மாதம் 7ம் தேதி முதல் தொடர்ந்து விசாரிக்கப்படும் என்று சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. மேலும், காவிரி தொடர்பான வழக்கு நடுவர் மன்றத்திற்கு மீண்டும் திருப்பி அனுப்பப்பட மாட்டாது என்றும் சுப்ரீம் கோர்ட் உறுதி அளித்துள்ளது.
காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பான வழக்கு விசாரணை இன்று சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதி மிஸ்ரா தலைமையிலான அமர்வு முன்பு வந்தது. அப்போது, 67 சதவீதம் வறட்சி தமிழகத்தில் நிலவி வருவதாக தமிழக அரசு சார்பில் வாதாடப்பட்டது. இதனைத் தொடர்ந்து வினாடிக்கு 2000 கன அடி நீரை மறு உத்தரவு வரும் வரை கர்நாடக அரசு தமிழகத்திற்கு திறந்து விட வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது.

மேலும், பிப்ரவரி 7ம் தேதியில் இருந்து காவிரி நதி நீர் தொடர்பான வழக்கு தொடர்ந்து விசாரிக்கப்படும் என்று சுப்ரீம் கோர்ட் அமர்வு கூறியது. வழக்கில் சம்மந்தப்பட்ட மாநிலங்கள் அனைத்தும் உரிய விளக்கங்களை தயாரித்து 3 வாரத்தில் அளிக்க வேண்டும் என்றும் சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
காவிரி நதி நீர் தொடர்பான வழக்கு மீண்டும் நடுவர் மன்ற விசாரணைக்கு அனுப்பப்பட மாட்டாது என்று காவிரி வழக்கை விசாரிக்கும் உச்சநீதிமன்ற நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு உறுதி அளித்துள்ளது.
-
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
Gas bill: சென்னை பெருங்குடி ஹோட்டலில்! இட்லி, வடையுடன் கேஸ் சிலிண்டருக்கும் கட்டண வசூலா? உண்மை என்ன? -
திமுக மாணவரணி செயலாளராக முதல்முறையாக பெண் நிர்வாகி நியமனம்.. ராஜீவ் காந்தி திடீர் மாற்றம் -
அமெரிக்கா போட்ட தப்பு கணக்கு... ஈரான் விரித்த 'மொசைக்' வலை.. யார் இந்த முகமது அலி ஜாஃபரி? -
முகத்திற்கு நேராக மம்தா சொன்ன வார்த்தை! ஆளுநர் ரவியின் சிரிப்பு அப்படியே போச்சு! முதல் நாளே சம்பவம் -
160+ சீட்டில் எடப்பாடி பழனிசாமி யூடர்ன்.. சீனியர் லிஸ்ட்டை கிழித்து.. உளவுத்துறை மாஜி சொன்ன சீக்ரெட் -
2010ல் அதிமுக மாவட்ட பொறுப்பில் இருந்தேன்.. எடப்பாடியிடம் ஜனநாயகம் இருக்காம்.. காளியம்மாள் பேட்டி! -
ரஷ்யாவிற்கு சுக்கிர திசை.. அமெரிக்காவே திறந்து விட்ட புதிய வழி.. பல ஆயிரம் கோடி லாபம் கொட்டுகிறது -
தேமுதிகவால் திமுக கூட்டணியில் மற்ற கட்சிகளுக்கு நெருக்கடியா – ஒரே வார்த்தையில் முடித்த பிரேமலதா -
அமைதி வேண்டாம்! எங்களிடம் நீங்க நினைக்காத அஸ்திரம் உள்ளது! அதிர வைத்த புது சுப்ரீம் லீடரின் வார்னிங் -
தேமுதிக தொகுதிகளை குறைக்க திமுக பேச்சுவார்த்தை.. டென்ஷனில் பிரேமலதா விஜயகாந்த்.. ஸ்டாலினின் கேம்! -
உலகை கண்ட்ரோல் செய்யும் "நிழல்" கப்பல்கள்.. அப்போ நாம் கண்ணால் காண்பது எல்லாமே பொய்யா?












Click it and Unblock the Notifications