காவிரி அமைப்பு பெங்களூரில் அல்ல, டெல்லியில்.. சுப்ரீம் கோர்ட் உத்தரவு.. தமிழகத்திற்கு மகிழ்ச்சி
Recommended Video
டெல்லி: காவிரி வரைவு திட்ட அறிக்கை குறித்த விசாரணை இன்று மீண்டும் உச்சநீதிமன்றத்திற்கு விசாரணைக்கு வந்தது. மத்திய அரசு தாக்கல் செய்துள்ள திட்ட அறிக்கையை ஏற்க வேண்டுமா என்பது குறித்து முடிவு செய்யப்படும் என்று கடந்த விசாரணையில் உச்சநீதிமன்றம் தெரிவித்திருந்தது.
இன்று வரைவு திட்டம் பற்றி விசாரணைக்கு வந்தபோது, மாநிலங்களின் வாதத்தை உச்சநீதிமன்றம் கேட்டறிந்தது.
அப்போது சுப்ரீம் கோர்ட் பல அதிரடி உத்தரவுகளை பிறப்பித்தது. பெங்களூரில் காவிரி அமைப்பின் தலைமையிடம் அமைக்கப்போவதாக மத்திய அரசு கூறியதை உச்சநீதிமன்றம் ஏற்கவில்லை.
டெல்லியில் தலைமையிடத்தை அமைக்க உச்சநீதிமன்றம் வலியுறுத்தியது. இதுவும் தமிழகத்திற்கு சாதகமான அம்சமாகும்.
பெங்களூரில் காவிரி அமைப்பை ஏற்படுத்தினால், பிரச்சினையான காலகட்டங்களில் அங்கு தமிழக பிரதிநிதிகள் செல்வதில் சிக்கல் ஏற்பட வாய்ப்பு இருந்தது. மேலும், காவிரி கர்நாடகாவிற்கே சொந்தம் என்ற தோற்றத்தை ஏற்படுத்த இது வகை செய்தது. எனவே டெல்லியில் தலைமை அமைப்பை உருவாக்குவது தமிழகத்திற்கு சாதகமானதாகும்.