கர்நாடகாவில் வன்முறை... தலையிட கோரிய மனு மீது உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை
டெல்லி: கர்நாடகா மற்றும் தமிழகத்தில் அமைதியை நிலைநாட்ட உச்சநீதிமன்றம் தலையிட கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு மீது உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை நடைபெற உள்ளது.
காவிரி பிரச்சனையில் கர்நாடகாவில் தமிழகத்துக்கு எதிராக மிகப் பெரிய வன்முறை கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ளது. ஒரே நாளில் 100க்கும் மேற்பட்ட வாகனங்கள் தீக்கிரையாகின. நாள்தோறும் தமிழக வாகனங்கள் தாக்கப்பட்டு வருகின்றன.

உச்சநீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்தே கன்னட அமைப்புகள் மிக மோசமான வன்முறையில் இறங்கியுள்ளன. இதனால் உச்சநீதிமன்றம் இந்த விவகாரத்தில் தலையிட வேண்டும் என்று கன்னியாகுமரியைச் சேர்ந்த சமூக ஆர்வலர் ஒருவர் உச்சநீதிமன்றத்தில் பொதுநலன் வழக்கு தொடர்ந்தார்.
இந்த மனு நீதிபதி தீபக் மிஸ்ரா பெஞ்ச் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வருகிறது. காவிரி விவகாரத்தில் கர்நாடகாவை வெளுத்துக் கட்டியவர் நீதிபதி தீபக் மிஸ்ரா என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications